மங்கலான பார்வையால் அவதியா? - சரிசெய்ய சிம்பிள் டிப்ஸ்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்குப் பாருங்கள்.

கைபேசி மற்றும் மடிக்கணினியை அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். ஆகையால், குறைத்துக் கொள்ளுங்கள்.

இருட்டில் அல்லது அதிக வெளிச்சத்தில் திரையைப் பார்ப்பது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

கண்களை அடிக்கடி இமைக்கவும். இது கண்களில் ஈரப்பதத்தை தக்கவைப்பதால் கண் வறட்சி குறையும்

கேரட், பசலைக்கீரை, பாதாம் போன்ற வைட்டமின் A மற்றும் E உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கண்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

கைகளால் கண்களை கசக்குவது தொற்றுநோயை ஏற்படுத்தும். அதற்கென தனியாக துணியை பயன்படுத்தலாம்.

வெளியில் செல்லும்போது புற ஊதா கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாக்க கூலர்ஸ் அணியலாம்

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும்

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சாதாரண கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.