MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
Delimitation Bill 2026 Fails: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு, டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில், டெல்லி வீழ்த்திய தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிப்பொங்க பதிவிட்டுள்ளார்.
தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்களை, பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கான வாக்கெடுப்பு இன்று மக்களவையில் நடந்தது.இந்த மசோதாவிற்கு ஆதரவாக மொத்தம் 298 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் 230 வாக்குகள் விழுந்தன.
சாதாரண சட்டங்களுக்கு வெறும் பெரும்பான்மை போதுமானது என்றாலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) ஆதரவு கட்டாயம்.
கணக்குப்படி பார்த்தால் வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினர்களில், மசோதா வெற்றி பெற குறைந்தபட்சம் 352 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், அரசுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியில் முடிந்தது.
முதல்வர் ஸ்டாலின் பதிவு:
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியில் முடிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு, டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 17, 2026
டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!#TNWillFightTNWillWin #SayNoToNDA#Delimitation pic.twitter.com/hPevQTPTCQ
மேலும் இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி! என்றும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிராக ஓரணியில் நின்றன,இதுவே இந்த மசோதாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக தலைமையிலான NDA-விற்கு மக்களவையில் பெரும்பான்மை இருந்தபோதிலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்குத் தேவையான 'மெஜாரிட்டி' (2/3) இல்லாததே இந்த வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்




















