மேலும் அறிய

Kalai Thiruvizha: கலைத் திருவிழா மாநிலப் போட்டிகள்; வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி விருதுகள், வெளிநாட்டுச் சுற்றுலா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதேபோல முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி அளவிலான போட்டிகள்

முதற்கட்டமாக பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலப் போட்டி இன்று (டிசம்பர் 27) முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

வகுப்பு வாரியாக மாநிலப் போட்டிகள் 

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அளவிலான அனைத்து வகைப் போட்டிகளும் மதுரை மாவட்டத்தில் நடைபெறுகின்றன. 9, 10 வகுப்புகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன. ஒரு மாவட்டத்தில் 5 முதல் 6 இடங்களில் பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் காண்கலை, நுண்கலை, நாடகம், மொழி திறன் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இசை, வாய்ப் பாட்டு, கருவி இசை - தோல் கருவி, கருவி இசை - துளை, காற்றுக் கருவி, கருவி இசை - தந்திக் கருவி, இசைச் சங்கமம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடனப் போட்டி நடைபெற உள்ளது. 

15 குழுக்கள் அமைப்பு

மாநில அளவிலான கலை திருவிழா போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, இட வசதி, உணவு, மாணவர் பாதுகாப்பு, ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
Anbumani Ramadoss: ”ராமதாஸிற்கு அதிகாரம்லாம் இல்லை” கேக் வெட்டி வேட்டு வைத்த அன்புமணி - ஷாக் ஆன அய்யா..
Anbumani Ramadoss: ”ராமதாஸிற்கு அதிகாரம்லாம் இல்லை” கேக் வெட்டி வேட்டு வைத்த அன்புமணி - ஷாக் ஆன அய்யா..
திண்டுக்கல் பரபரப்பு! அமைச்சர் ஐ. பெரியசாமி, மகன், பேத்தி வீடுகளில் ED சோதனை: காரணம் என்ன?
திண்டுக்கல் பரபரப்பு! அமைச்சர் ஐ. பெரியசாமி, மகன், பேத்தி வீடுகளில் ED சோதனை: காரணம் என்ன?
Top 10 News Headlines: 38 பேரின் நிலை கவலைக்கிடம், மாணவர்களுக்கு சலுகை, ரூ. 1.26 லட்சம் அபராதம்  - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: 38 பேரின் நிலை கவலைக்கிடம், மாணவர்களுக்கு சலுகை, ரூ. 1.26 லட்சம் அபராதம் - 11 மணி செய்திகள்
PM Modi: டேமேஜ் ஆன இமேஜ், RSS-ற்கு பணிந்த மோடி? மும்முனை தாக்குதல், பலனளிக்குமா பாஜகவின் ப்ளான்?
PM Modi: டேமேஜ் ஆன இமேஜ், RSS-ற்கு பணிந்த மோடி? மும்முனை தாக்குதல், பலனளிக்குமா பாஜகவின் ப்ளான்?
Embed widget