மேலும் அறிய

‘குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் ’; பணம் கேட்டு மிரட்டிய பெங்களூரு இளைஞர் கைது

Kanchipuram: குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞர் கைது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
 
தொடர்ந்து வந்த மிரட்டல் அழைப்புகள்
 
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நெசவுத் தொழில் செய்து நடுத்தர வசதியுடன் இருக்கும் சுந்தரமூர்த்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
 
சிவகாஞ்சி காவல் நிலையம் - Sivakanchi Police Station
சிவகாஞ்சி காவல் நிலையம் - Sivakanchi Police Station
 
தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனை விளையாட்டாக நினைத்துக் கொண்ட சுந்தரமூர்த்தி செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மறுநாள் அதே நேரத்தில் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியின் இரு குழந்தைகளையும் கடத்தி கண்டம் துண்டமாக வெட்டி கொன்று விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்
 
காவல் நிலையத்தில் புகார் ( siva kanchi police station )
 
இதனால் பயந்து போன சுந்தரமூர்த்தி செல்போன் அழைப்பு மிரட்டல் குறித்து சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் உத்தரவின் பேரில் அதிரடியாக களமிறங்கிய சிவகாஞ்சி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்த செல்போன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர்
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர்
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன், தேடுதல் வேட்டை
 
சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அது கர்நாடக மாநிலம் பெங்களூருவை காட்டிய நிலையில், சிவகாஞ்சி போலீஸ்கார் அந்த பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் செல்போனில் மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபரான இளைஞரை கண்டுபிடித்தனர்.
 
பணம் பறிக்க நூதன முயற்சி
 
இளைஞரை கண்டு பிடித்து கைது செய்த நிலையில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் சபரிஷ் என்பதும், அவரின் குடும்பத்தினர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் தனது பண தேவைக்காக விளையாட்டாக , செல்போன் எண்ணில் உள்ள வாட்ஸ் அப் டிபி புகைப்படத்தை வைத்து செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
 
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
 
கைது செய்து சிறையில் அடைப்பு
 
இதனைத் தொடர்ந்து பெங்களூரு இளைஞரான சபரிஷை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்து இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சமுதாயத்தில் நல்ல படிப்பறிவுடன், உயர் பதவியில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்  செல்போனில் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget