மேலும் அறிய

ஆருத்ரா, ஐஎஃப்எஸ் முதலீடு..? கடன் தொல்லையில் சிக்கித் தவித்த இளைஞர் தற்கொலை ..! தொடரும் சோகம்

" உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை"

பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திருப்பி வராததால் கடன் தொல்லை ஏற்பட்டதால் காஞ்சிபுரத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி,கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஐ.எஃப்.எஸ் , ஆருத்ரா நிதி நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்ததாக கூறகூறப்படுகிறு. மேலும் பல பேரிடம் கடனாக தொகையை பெற்று முதலீடு செய்திருந்த நிலையில், நிதி நிறுவனங்களில் இருந்து பணம் ஏதும் திரும்பி வராததால் பெரும் சிரமம் அடைந்து உள்ளார்.


ஆருத்ரா, ஐஎஃப்எஸ் முதலீடு..? கடன் தொல்லையில் சிக்கித் தவித்த இளைஞர் தற்கொலை ..! தொடரும் சோகம்

போலீசார் தீவிர விசாரணை

மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நச்சரிக்க தொடங்கவே கடன் தொல்லை அதிகமான காரணத்தால், மனம் உடைந்த ராஜி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஆருத்ரா, ஐஎஃப்எஸ் முதலீடு..? கடன் தொல்லையில் சிக்கித் தவித்த இளைஞர் தற்கொலை ..! தொடரும் சோகம்

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ராஜிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனாகப் பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம்  திரும்பி வராமல் போனதால்,  கடன் தொல்லை அதிகமாகி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காமராஜ் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் தற்கொலை சம்பவங்கள்

கடந்த இரண்டு ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் பல்வேறு நிதி நிறுவனங்கள் , நூதன முறையில்  டிரேடிங் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றினார். இதன் காரணமாக, அதில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்பொழுது, இது போன்ற நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள், முகவர்கள் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி உள்ளது. மக்கள் பணத்தை ஏமாற்றிய நிறுவனங்களின் பல   நிறுவனர்கள் வெளிநாட்டில் தலைமறியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. விரைந்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதே ஏமாந்த பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது .


Suicidal Trigger Warning.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget