மேலும் அறிய

ஆருத்ரா, ஐஎஃப்எஸ் முதலீடு..? கடன் தொல்லையில் சிக்கித் தவித்த இளைஞர் தற்கொலை ..! தொடரும் சோகம்

" உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை"

பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திருப்பி வராததால் கடன் தொல்லை ஏற்பட்டதால் காஞ்சிபுரத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி,கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஐ.எஃப்.எஸ் , ஆருத்ரா நிதி நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்ததாக கூறகூறப்படுகிறு. மேலும் பல பேரிடம் கடனாக தொகையை பெற்று முதலீடு செய்திருந்த நிலையில், நிதி நிறுவனங்களில் இருந்து பணம் ஏதும் திரும்பி வராததால் பெரும் சிரமம் அடைந்து உள்ளார்.


ஆருத்ரா, ஐஎஃப்எஸ் முதலீடு..? கடன் தொல்லையில் சிக்கித் தவித்த இளைஞர் தற்கொலை ..! தொடரும் சோகம்

போலீசார் தீவிர விசாரணை

மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நச்சரிக்க தொடங்கவே கடன் தொல்லை அதிகமான காரணத்தால், மனம் உடைந்த ராஜி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஆருத்ரா, ஐஎஃப்எஸ் முதலீடு..? கடன் தொல்லையில் சிக்கித் தவித்த இளைஞர் தற்கொலை ..! தொடரும் சோகம்

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ராஜிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனாகப் பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம்  திரும்பி வராமல் போனதால்,  கடன் தொல்லை அதிகமாகி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காமராஜ் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் தற்கொலை சம்பவங்கள்

கடந்த இரண்டு ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் பல்வேறு நிதி நிறுவனங்கள் , நூதன முறையில்  டிரேடிங் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றினார். இதன் காரணமாக, அதில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்பொழுது, இது போன்ற நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள், முகவர்கள் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி உள்ளது. மக்கள் பணத்தை ஏமாற்றிய நிறுவனங்களின் பல   நிறுவனர்கள் வெளிநாட்டில் தலைமறியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. விரைந்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதே ஏமாந்த பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது .


Suicidal Trigger Warning.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget