மேலும் அறிய

மரக்காணத்தில் மீண்டும் தலைதூக்கிய கள்ளச் சாராயம்; பிரபல சாராய வியாபாரியை தட்டிதூக்கிய போலீஸ்

மரக்காணம் மட்டும் சுற்றுப்புற கிராமங்களில் யார் யார் மொத்தமாக கள்ளச்சாராயத்தை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: மரக்காணத்தில பிரபல கள்ளச்சாராய வியாபாரியிடம் 550 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி புதுச்சேரி மாநிலம் அருகில் உள்ளது. இதனால் புதுச்சேரி பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளிட்ட மதுபானங்களில் விற்பனை எப்போதுமே அமோகமாக நடைபெறும். இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பா மணல் பகுதியில் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு எக்கியர் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட துணை கண்காணிப்பாளர் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரையும் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து மரக்காணம் மட்டும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த நிலையில் மரக்காணம் அருகே கரிப்பாளையம் பகுதியில் பிரபல கள்ளச்சாராய வியாபாரி வீட்டில் சாராயக்கேன்கள் மறைத்து வைத்திருப்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மரக்காணம் காவல் ஆய்வாளர் பாபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை போலீசார் கரிப்பாளையம் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்கள் மற்றும் 100 எம்.எல் அளவு கொண்ட 270 சாராய பாக்கெட்டுகள் இருந்துள்ளது. போலீசார் இதனை பறிமுதல் செய்து, கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பிரபல கள்ளச்சாராய வியாபாரி லோகு மகன் ஞானவேல் வயது (24) என்பவரை கைது செய்தனர். தொடந்து அவரிடம் இந்த சாராயம் எங்கிருந்து வந்தது இதனை மொத்தமாக விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரிகள் யார் யார்? அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர். இதே போல் மரக்காணம் மட்டும் சுற்றுப்புற கிராமங்களில் யார் யார் மொத்தமாக கள்ளச்சாராயத்தை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?Bird Flu | பரவியதா பறவை காய்ச்சல் கொத்து,கொத்தாக மடியும் காகங்கள் அதிர்ச்சி காட்சிகள்!SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
12th Revaluation Result 2024: வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
Online Delivery Cobra: மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
“படுத்திருந்தவர் மீது கார் ஏற்றினாரா எம்.பி-யின் மகள்?” கைது செய்த சென்னை காவல்துறை – பரபரப்பு சம்பவம்..!
“படுத்திருந்தவர் மீது கார் ஏற்றினாரா எம்.பி-யின் மகள்?” கைது செய்த சென்னை காவல்துறை – பரபரப்பு சம்பவம்..!
Embed widget