மேலும் அறிய

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

’’விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பியோடியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்துக்கு தீ வைத்தனர்’’

விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு அரவிந்த் நகரை சேர்ந்தவர் சேகர் மகன் அர்ஜூனன் (28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று அர்ஜூணன், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார். அவர் அடுத்த வாரம் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தார். அர்ஜூனன், விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்தில் இருந்து மணிமேகலை தெருவுக்கு சவாரி சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்துக்கு புறப்பட்டார்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்திற்கு அருகில் இரவு 8.20 மணியளவில் அவரது ஆட்டோ செல்ல முயன்ற போது அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறி அர்ஜூனன் கீழே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவரது மீது ஏறியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் தனியார் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

இதையறிந்ததும் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். விபத்தில் அர்ஜூணன் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். அர்ஜூணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் தனியார் பஸ் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்றும், பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதை அறிந்ததும் ஆத்திரமடைந்த அர்ஜூனனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அந்த தனியார் பஸ்சின் மீது கல்வீசி தாக்கியும், உருட்டுக்கட்டையாலும் அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளும் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அதோடு ஆத்திரம் தீராத அவர்கள், பஸ்சிற்குள் சென்று பின்பக்க இருக்கைகளில் பெட்ரோலை ஊற்றி பஸ்சுக்கு தீ வைத்து கொளுத்தினர். இதில் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் பின்பக்க பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

பின்னர் விபத்தில் பலியான அர்ஜூணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அதற்கு அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அர்ஜூணனின் உடலை நடுரோட்டிலேயே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதை கேட்டறிந்த போலீசார், விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன் பிறகு இரவு 9.15 மணியளவில் அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அர்ஜூனனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த தனியார் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Embed widget