மேலும் அறிய

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

’’விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பியோடியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்துக்கு தீ வைத்தனர்’’

விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு அரவிந்த் நகரை சேர்ந்தவர் சேகர் மகன் அர்ஜூனன் (28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று அர்ஜூணன், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார். அவர் அடுத்த வாரம் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தார். அர்ஜூனன், விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்தில் இருந்து மணிமேகலை தெருவுக்கு சவாரி சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்துக்கு புறப்பட்டார்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்திற்கு அருகில் இரவு 8.20 மணியளவில் அவரது ஆட்டோ செல்ல முயன்ற போது அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறி அர்ஜூனன் கீழே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவரது மீது ஏறியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் தனியார் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

இதையறிந்ததும் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். விபத்தில் அர்ஜூணன் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். அர்ஜூணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் தனியார் பஸ் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்றும், பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதை அறிந்ததும் ஆத்திரமடைந்த அர்ஜூனனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அந்த தனியார் பஸ்சின் மீது கல்வீசி தாக்கியும், உருட்டுக்கட்டையாலும் அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளும் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அதோடு ஆத்திரம் தீராத அவர்கள், பஸ்சிற்குள் சென்று பின்பக்க இருக்கைகளில் பெட்ரோலை ஊற்றி பஸ்சுக்கு தீ வைத்து கொளுத்தினர். இதில் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் பின்பக்க பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

பின்னர் விபத்தில் பலியான அர்ஜூணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அதற்கு அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அர்ஜூணனின் உடலை நடுரோட்டிலேயே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதை கேட்டறிந்த போலீசார், விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன் பிறகு இரவு 9.15 மணியளவில் அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அர்ஜூனனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த தனியார் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
மதுரையில் கஞ்சா, ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்: அதிரடி கைது!
மதுரையில் கஞ்சா, ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்: அதிரடி கைது!
பள்ளி மாணவியின் அதிரடி புகார்... போக்சோவில் சிக்கிய 3 சிறுவர்கள்: தஞ்சையில் அதிர்ச்சி
பள்ளி மாணவியின் அதிரடி புகார்... போக்சோவில் சிக்கிய 3 சிறுவர்கள்: தஞ்சையில் அதிர்ச்சி
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget