மேலும் அறிய

திருவாரூரில் காந்தி சிலை உடைப்பு விவகாரம்: 3 இளைஞர்கள் கைது

தீபாவளி அன்று இரவு நண்பர்கள் 8 பேர் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தி உள்ளனர் அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது மது போதையில் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலையை அடித்து உடைத்துள்ளனர்

திருவாரூரில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை உடைப்பு விவகாரத்தில் மூன்று இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். தப்பி ஓடிய ஐந்து இளைஞர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வடகண்டம் சீவெளி பாலவை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தற்பொழுது 112 மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மழையின் காரணமாகவும் அடுத்த நான்கு நாட்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி விடுமுறை முடிந்த பிறகு இன்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன இந்த நிலையில் எப்பொழுதும் போல் வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தூய்மை செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் இன்று காலை பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.


திருவாரூரில் காந்தி சிலை உடைப்பு விவகாரம்: 3  இளைஞர்கள் கைது

அப்பொழுது வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்து கொண்டிருக்கும் பொழுது மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பதை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரிஜாவிற்கு தூய்மை பணியாளர்கள் மகாத்மா காந்தியின் முழு திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை ஆசிரியர் கிரிஜா மகாத்மா காந்தி சிலை சேதப்பட்டு இருப்பதை நேரடியாக பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த பள்ளியில் மகாத்மா காந்தியின் முழு திருவுருவ சிலை என்பது அமைக்கப்பட்டுள்ளது தற்பொழுது இந்த சிலையை சேதப்படுத்தியது யார் என்பதை குறித்து குடவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தீபாவளி அன்று இரவு நண்பர்கள் 8 பேர் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தி உள்ளனர் அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது மது போதையில் பள்ளியில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடித்து உடைத்துள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.


திருவாரூரில் காந்தி சிலை உடைப்பு விவகாரம்: 3  இளைஞர்கள் கைது

அதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாலவை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அரவிந்த் மற்றும் ஆகாஷ் வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்த தேவசிவா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய ஐந்து நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக வடகண்டம் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வடகண்டம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை உடைத்து அங்குள்ள சிலிண்டர் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்கள், மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைக்க முயற்சி செய்துள்ளார்கள் தொடர்ந்து வடகண்டம் பகுதியில் அதிகளவில் திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி சிலை உடைப்பு விவகாரத்தில் உடனடியாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தது போல் அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடை உடைப்பு விவாகரத்து ஈடுபட்ட குற்றவாளிகளையும் விரைவாக காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வடகண்டம் கிராம மக்கள் மாவட்ட காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget