மேலும் அறிய

கர்ப்பமான கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை - காதலன் மீது வன்கொடுமை வழக்கு பாய்ந்தது

சாவித் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கற்பழிப்பு, காதலித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவான சாவித்தையும் தேடி வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகனான 24 வயதான சாவித் அப்பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள திருவநாதபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகள் ஆர்த்தி என்பவரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆர்த்தி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி ஆர்த்தி கர்ப்பம் தரித்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்திருக்கிறார். சாவித் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதாலும் மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதாலும்  திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்தளது. 


கர்ப்பமான கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை - காதலன் மீது வன்கொடுமை வழக்கு பாய்ந்தது

இதனை அடுத்து கல்லூரி விடுமுறையின் காரணமாக வீட்டிலிருந்த மாணவி மன விரக்தி அடைந்து எலி பேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு நாள் வரை எலி பேஸ்ட் உட்கொண்டு எதுவும் செய்யாததால், வீட்டில் இது குறித்து சொல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததையடுத்து  உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் .அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் இருந்த மூன்று மாத கரு  கலைந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


கர்ப்பமான கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை - காதலன் மீது வன்கொடுமை வழக்கு பாய்ந்தது

இதுகுறித்து மாணவியின் தரப்பில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சாவித் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கற்பழிப்பு, பெண்ணை காதலித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவான சாவித்தையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஆர்த்தி தரப்பினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குவிந்தனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து  சாவித்தின் அம்மா மற்றும் தங்கை இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சாவித் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget