மேலும் அறிய

Crime: "நான் தான் போலீஸ்” ... மது அருந்துபவர்களிடம் பணத்தை பறித்த நபர் கைது

போலீசார் என்று கூறி மது அருந்துபவர்களிடம், மூதாட்டியிடம் முதியோர்தொகை பெற்று தருவதாகவும் ஏமாற்றி பணத்தை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காமராஜர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் வயது ( 75). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் கோவிந்தம்மாளிடம் நைசாக பேச்சுக்கொடுத்து முதியோர் உதவித் தொகை வாங்குகிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு தனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அப்போது அந்த வாலிபர் கோவிந்தம்மாளிடம் நான் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறேன். எனக்கு நீங்கள் 3 ஆயிரம் பணத்தை கொடுத்தால் நான் வாங்கி தருகிறேன் என நம்பிக்கை தரும் விதத்தில் கூறியுள்ளார். இதனை நம்பிய கோவிந்தம்மாள் ரூபாய் 2 ஆயிரம் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளார். உடனடியாக வாலிபர், முதியோரிடம் நீங்கள் காதில் அணிந்திருக்கும் நகையை விற்றால் போது என்று கூறியுள்ளார்.


Crime:

முதியோர் பணம் வாங்கி வருவதாக மூதாட்டியிடம் பணம் பறிப்பு 

அதன் பிறகு 2 ஆயிரத்தை கொடுங்கள். மீதம் உள்ள ஆயிரம் ரூபாயை இந்த நகையை விற்று எடுத்துக்கொண்டு மீதி பணத்தை உங்களிடம் தந்து விடுகிறேன் என கோவிந்தம்மாள் கூறியுள்ளார். தனது காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் வீட்டினுள் சென்று 2 ஆயிரம் பணத்தையும் எடுத்து வந்து அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். நகை விற்ற பணத்தில் மீதமுள்ள பணத்தை அவர் தருவார் என காத்திருந்த கோவிந்தம்மாள் வெகுநேரம் ஆகியும் அந்த வாலிபர் வராததால் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உங்களிடம் நகை, பணத்தை ஏமாற்றி எடுத்து சென்று இருப்பார் என கூறியுள்ளார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை கோவிந்தம்மாள் உணர்ந்தார். இதுகுறித்து அவர் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.

 


Crime:

 

காவல்துறையினர் விசாரணை 

அதனைத் தொடர்ந்து வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராம கூட்டுச் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தினர். ஆனால் வாலிபர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவாமூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்று தெரியவந்தது. முருகன் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு பல்வேறு இடங்களில் வயல்வெளியில் கூலி வேலை செய்யும் முதியோர்களை மட்டும் குறி வைத்து உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து விடுவது தெரியவந்தது. கோவிந்தம்மாளிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியதை முருகன் ஒப்புக்கொண்டார்.

 


Crime:

 

போலீசார் என கூறி மது பிரியர்களிடம் பணம்பறிப்பு 

மேலும் அவரிடம் காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது முருகன் காவல்துறை அதிகாரி என்று கூறி மது பிரியர்களிடம் பணத்தை பறித்து செல்வதும், செஞ்சி பகுதியில் வழியில் சென்ற நபரிடம் 43 ஆயிரத்து 300 ரூபாயும் செய்யாறு பகுதியில் வயதான மூதாட்டியிடம் நகைகளை அடமானம் வைத்து பணம் தருகிறேன் என்று கூறி தங்க நகைகளை பறித்ததையும் இவர் ஒப்புக்கொண்டார். இவர் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பண்ருட்டியில் டிராவல்ஸ் நடத்தி வருவதும் 3 போலியான முகவரியில் அடையாள அட்டை இருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Embed widget