மேலும் அறிய

11ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

’’பேசும் திறன் இன்னும் மாணவிக்கு வரவில்லை. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் ஹரிபிரசாத் என மாணவி எழுதி காண்பித்துள்ளார்’’

திருவண்ணாமலையை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள்  16 வயதுடைய சிறுமி, இவர் சென்னை கோளவளம் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி  11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டிற்கு தொலைபேசி மூலம் அழைத்து தனது உடல் நிலை சரியில்லாமல் உள்ளதால் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் சென்னை சென்று சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

11ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

அப்போது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது, அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பாமாக இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வெளியில் வந்த மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் சென்று சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது மயக்கநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன் பெயரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி மற்றும் காவலர்கள் அந்த மாணவி பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று, மாணவியின் வருகை பதிவேடு, மாணவியை பெற்றோர் எப்போது அழைத்து சென்றனர், மாணவியின் நடத்தை குறித்து தலைமையாசிரியர், விடுதி வார்டன் மற்றும் ஆசிரியர்களிடம்  விசாரணை நடத்தினர். இருந்தாலும் மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாமல் இருந்து வந்தது. 

11ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

இந்நிலையில், தீவிரசிகிச்சைக்கு பிறகு தற்போது அந்த மாணவிக்கு நினைவு திரும்பத் தொடங்கியது. ஆனாலும் பேசும் திறன் இன்னும் மாணவிக்கு வரவில்லை. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் ஹரிபிரசாத் என மாணவி எழுதிக் காண்பித்துள்ளார். அந்த பெயரை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் வயது (31) என்பவர் மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் காதல் திருமணம் செய்துகொண்டு, திருவண்ணாமலை கரியான் செட்டி தெருவில் வசித்து வருகிறார். அப்போது, இந்த மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து  நேற்று இரவு காவல்துறையினர் ஹரிபிரசாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget