மேலும் அறிய

நெல்லை : காணாமல்போன அண்ணன், தம்பி; தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் கொலை? வெளியான பகீர் தகவல்..

”கொலை செய்யப்பட்ட இருவரும் கஞ்சா கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டனரா?" அல்லது தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா? என காவல்துறையினர் விசாரணை..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். அங்கு பேரூராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு மணிகண்டன் (25) மற்றும் சபரீஸ்வரன் (13) ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்டன் என்பவர் லோடு ஆட்டோவில் ஊர் ஊராக சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி நெல்லைக்கு வெங்காயம் விற்பனை செய்ய வந்த மணிகண்டனுக்கு உதவியாக அவரது தம்பி சபரீஸ்வரனும் வந்துள்ளார். இருவரும் சுத்தமல்லி அருகே அறை எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.


நெல்லை : காணாமல்போன அண்ணன், தம்பி; தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் கொலை? வெளியான பகீர் தகவல்..

இந்த சூழலில் கடந்த 15 ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து வெங்காய வியாபாரம் செய்வதற்காக நெல்லை வந்துள்ள அண்ணன் தம்பி இருவரையும் காணவில்லை கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் புகார் கொடுத்து உள்ளனர். இதனடிப்படையில் தேடுதலில் இறங்கிய சுத்தமல்லி காவல்துறையினர் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் கொண்டாநகரம் காட்டுப்பகுதியில் பாழடைந்த மண்டபம் அருகே அண்ணன், தம்பி இருவரும் கொலை செய்யப்பட்டு சடலங்களாக கிடந்ததை கண்டறிந்தனர். இருவரது உடல்களையும் மீட்ட காவல் துறையினர், நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். 
நெல்லை : காணாமல்போன அண்ணன், தம்பி; தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் கொலை? வெளியான பகீர் தகவல்..

இந்த இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதில்  கொலையான அண்ணன் மணிகண்டன்,  தம்பி சபரீஸ்வரன் இருவரும் திண்டுக்கல்லில் இருந்து நெல்லை வந்து அறை எடுத்து தங்கி வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்களுடன் கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது தம்பி பார்த்திபன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.  இதில் சதீஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதாக தெரிகிறது. மேலும் சமீபத்தில் தான் சதீஸ்குமார் கைதாகி சிறையிலிருந்து வெளி வந்துள்ளார். அதேபோல அண்ணன் சதீஷ்குமார், தம்பி பார்த்திபன் இருவருக்கும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


நெல்லை : காணாமல்போன அண்ணன், தம்பி; தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் கொலை? வெளியான பகீர் தகவல்..

இந்த சூழலில் தான் கடந்த 10 ம் தேதி முதலே வெங்காய வியாபாரிகளான அண்ணன், தம்பி இருவரும் காணாமல் போனதாகவும், இருவரின் மொபைல் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் நெல்லையில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு கடந்த 15ம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் அண்ணன் தம்பி இருவரையும்  காணவில்லை. வாகனம் மட்டும் அங்கேயே நிற்கிறது என புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கிய போது தான் கொண்டாநகரம் காட்டுப் பகுதியில் பாழடைந்த மண்டபத்தில் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்ட இருவரின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டது. மேலும் அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் இதில் தொடர்புடைய சதீஷ்குமார் மற்றும் பார்த்திபன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில் கஞ்சா கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொலை செய்தனரா?  அல்லது தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா என இரு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget