மேலும் அறிய

பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்த நபர்... 5 நாட்களில் தட்டித் தூக்கிய தஞ்சை போலீஸ்

தஞ்சையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவரை டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவரை டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையிலான தனிப்படையினர் போலீசார் கைது செய்தனர். மேலும் தஞ்சை தெற்கு போலீஸ் பகுதிக்குட்பட்ட வீட்டில் இருந்து திருடப்பட்ட 11 பவுன் நகையையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். சிங்கப்பூரில் இன்ஜினியராக உள்ளார். இவருடைய மனைவி கீதா. வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி காலை கீதா தனது மகளுடன் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். தொடர்ந்து கீதாவின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து கீதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 48 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கீதா, தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் நகர டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நசீர், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, ஏட்டுக்கள் கோதண்டபாணி, சிவக்குமார், காவலர்கள் அருண்மொழிவர்மன், சையது இஸ்மாயில், திருக்குமரன், விஜயசந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.


பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்த நபர்... 5 நாட்களில் தட்டித் தூக்கிய தஞ்சை போலீஸ்

இதையடுத்து தனிப்படை போலீசார் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகர் பகுதியை சேர்ந்த வீரையன் மகன் வெங்கடேசன் (33) என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வெங்கடேசன் இருந்துள்ளார்.

உடன் அவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்ததில் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆயுதபூஜையன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் வார்டனாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் இருந்து 12 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதும் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்தது. அந்த நகைகளையும் போலீசார் மீட்டு வெங்கடேசனை கைது செய்தனர். தொடர்ந்து வெங்கடேசனை புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதுகுறித்து நகர டிஎஸ்பி ராஜா கூறியதாவது: பகல் நேரத்தில் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் வீடு புகுந்து நடந்த கொள்ளை சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டோம். அப்பகுதியை நன்கு தெரிந்த நபர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். 200க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிலர் சந்தேக வட்டத்திற்குள் வந்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை ஒரு நபர் மட்டும் நியூ ஹவுசிங் யூனிட் உட்பட நகர் பகுதியில் சுமார் 3 மணிநேரம் சுற்றி, சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த நபர் குறித்து நடந்த விசாரணையில் அவர் நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகர் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. உடன் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது நியூ ஹவுசிங் யூனிட் மற்றும் சரபோஜி காலேஜ் வார்டன் ஆறுமுகம் வீட்டிலும் வெங்கடேசன் திருடியது தெரிய வந்து மொத்தம் 60 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ஏடிஎம் கார்டு, வெளிநாட்டு கரன்சி, வீட்டு பூட்டை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை ஆகியவற்றை மீட்டுள்ளோம். வெங்கடேசனுக்கு தலை வழுக்கை என்பதால் விக் வைத்துக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிக வேகமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget