மேலும் அறிய

மணமான மறுநாளே நகையுடன் எஸ்கேப் ஆன பெண்: ‛நகையும் போச்சு.. நங்கையும் போச்சு..’ மாப்பிள்ளை கவலை!

திருமணம் முடியப்போகிறது என்ற சந்தோஷத்தில் ராஜேந்திரன் இருந்த நிலையில், திருமண தரகு கமிஷனாக ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

திருமணம் ஆன அடுத்த நாளே நகைகளுடன் ஓடிய மனைவி மீது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டித் தோட்டத்தில் வசித்து வருகிறார் 34 வயதான ராஜேந்திரன். இவர் தனது தந்தை மற்றும் தாயுடன் தங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், பல ஆண்டுகளாக ராஜேந்திரனுக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை பெண் எதுவும் கிடைக்காத நிலையில், ஈரோடு மாவட்டம் சிறுவலூரைச்சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்கச்சொல்லி இருக்கிறார் ராஜேந்திரன். இதனையடுத்து சந்திரன், திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் பகுதியைச்சேரந்த அம்பிகா எனும் பெண் தரகரை அறிமுகம் செய்துவைக்கிறார். இவராது நல்ல வரன் பார்த்து தருவார் என்று ராஜேந்திரன் நம்பியிருந்த நிலையில் தான், பெண் தரகர் அம்பிகா, அரியலூரைச்சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மற்றொரு பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

  • மணமான மறுநாளே நகையுடன் எஸ்கேப் ஆன பெண்: ‛நகையும் போச்சு.. நங்கையும் போச்சு..’ மாப்பிள்ளை கவலை!

பின்னர் பெண் தரகர் வள்ளியம்மா, தன்னுடைய வீட்டுக்கு ரீசா என்ற பெண் வந்துள்ளதாகவும், வந்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தார் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி வரச்சொல்லி இருக்கிறார். பெண்ணைப்பார்த்ததும் பிடித்துவிட்டதால் உடனடியாக பெற்றோர்களிடம் கூறி, கடந்த மாதம் 2 ஆம் தேதி ரீசாவை நிச்சயம் செய்திருக்கிறார் ராஜேந்திரன். இந்நிலையில் தான் உடனடியாக திருமணம் செய்து கொள் என பெண் வீட்டார்கள் வலியுறுத்தியதன் பேரில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். பல நாட்களாக திருமணம் தடைப்பட்டுவந்த நிலையில், தற்போது திருமணம் முடியப்போகிறது என்ற சந்தோஷத்தில் ராஜேந்திரன் இருந்த நிலையில், திருமண தரகு கமிஷனாக ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் பச்சாம்பாளையம் ஸ்ரீ செல்லப்பாண்டியம்மன் கோயிலில் வைத்து ரீசாவை ராஜேந்திரன் செய்துள்ளார்.

தன்னுடைய வாழ்க்கை தனக்கு பிடித்த பெண்ணுடன் தொடங்கப்போகிறோம் என்ற நேரத்தில் தான், அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியது. ரீசா என்ற மணப்பெண் திருமணம்  ஆன அடுத்த நாள் முழு நகை அலங்காரத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் பல மணி நேரம் ஆகியும் வராத நிலையில் விசாரித்தப்போது தான், முழு அலங்காரத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்த ரீசா காரை வரவழைத்து வீட்டிலிருந்து ராஜேந்திரன் போட்டிருந்த நகைகளுடன் மாயமானது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • மணமான மறுநாளே நகையுடன் எஸ்கேப் ஆன பெண்: ‛நகையும் போச்சு.. நங்கையும் போச்சு..’ மாப்பிள்ளை கவலை!

பின்னர், தனக்கு பெண் பார்த்த தரகர்களிடம் தொடர்புக் கொண்டு விசாரிக்க போன் செய்த நிலையில், அவர்களது அழைப்பை ஏற்கவில்லை. இதனையடுத்து சந்திரன் அரியலூருக்குச் சென்று விசாரித்தப்போது, ரீசாவுக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரா்ஜேந்திரன் குடும்பத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விவசாயி ராஜேந்திரன் மற்றும் நகைகளை ஏமாற்றி திருமணம் செய்ததாக 27 வயதான ரீசா, 38 வயதான பெண்தரகர் அம்பிகா மற்றும் வள்ளியம்மாள், ரீசாவின் உறவினர் தங்கம் மற்றும் தேவி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.  இப்படி தைரியமாக ஏமாற்றி திருமணம் செய்வதற்காகவே ஒரு கும்பல் உள்ள நிலையில், இதுவரை வேறு யாரையும் ஏமாற்றி உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget