மேலும் அறிய

தஞ்சாவூர்: தனியார் நிதிநிறுவன அதிகாரி கொலை - கொல்லப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்

’’தொழில் ரீதியாக அன்பு, வெங்கடேசனுக்கு பல லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததாக தெரிய வந்துள்ளது’’

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், பாடியநல்லுாரை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் வெங்கடேசன் (35), இவர் ஜீவி ஆர்கானிக் எனும் இயற்கை விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கம்பெனி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற இருந்தது.

இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெங்கடேஷ், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா, முடத்துாரை சேர்ந்த விஜயன் மகன் தாண்டிபன் (42), தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரம், செம்பூரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜாராம் (31), மகாராஷ்டிர மாநிலம், சிங்கையில் ரோட்டை சேர்ந்த பிரபாகர் மகன் ரவிக்கிரண் (42) மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இவர்கள் கம்பெனியின் விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்  வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் கம்பெனியின் விற்பனையாளர்களில் ஒருவரான கும்பகோணம் அடுத்த ஆடுதுறை, மேல்மருத்துவத்துகுடியை சேர்ந்த அன்பு (40), என்பவருடன் சேர்ந்து நேற்று இரவு தனியார் ஏசி பாரில் மது அருந்தியுள்ளனர். பின்னர் அன்பு,  மண்டல அதிகாரியான வெங்கடேனுடன் வெளியில் சென்று வருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் உடன் வந்த மற்ற அனைவரும் மீண்டும் தங்கள் தங்கும் விடுதிக்கு சென்று விட்டனர்.

 


தஞ்சாவூர்: தனியார் நிதிநிறுவன அதிகாரி கொலை - கொல்லப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்

இதையடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் வெங்கடேசன் தங்கும் விடுதியில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ராஜாராம் என்பவரை தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்தின் லொகேஷனை அனுப்பியுள்ளதாகவும் கையில் பணமில்லை உடனடியாக அந்த இடத்திற்கு மதுபாட்டில்களை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் தனக்கு இந்த ஊர் புதிது.  மேலும் தான் மது போதையில் இருப்பதால் தன்னால் வர முடியாது என வெங்கடேசனிடம் ராஜாராம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வரை வெங்கடேசன் மற்றும் அவரை அழைத்துச் சென்ற அன்பு  ஆகியோர் தங்கும் விடுதிக்கு வராததால் ராஜாராம், வெங்கடேசன் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அன்புவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இதையடுத்து  ராஜாராம் தன்னுடைய எண்ணிற்கு வெங்கடேசன் அனுப்பிய லொகேஷன் மூலம் தேடி சென்றபோது கும்பகோணம் அருகே மனஞ்சேரி காவிரி ஆற்றின் தடுப்பணை அருகே லொகேஷன் முடிவடைந்துள்ளது. பின்னர் அப்பகுதி முழுவதும் ராஜாராம் மற்றும் அவருடன் வந்த ஜான்ஸ்டீபன் ஆகியோர் வெங்கடேசனை தேடினர். அப்போது காவிரியாற்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்த நிலையில் வெங்கடேசன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜாராம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாலுகா போலீசார் ஆற்றில் மிதந்த வெங்கடேசன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.  இந்த சம்பவம் குறித்து ராஜாராமிடம் விசாரணை செய்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நேற்று இரவு ஆடுதுறையைச் சேர்ந்த அன்பு என்பவர் வெங்கடேசனை அழைத்துச் சென்றதாகவும் தற்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர்: தனியார் நிதிநிறுவன அதிகாரி கொலை - கொல்லப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்

இதையடுத்து ஆடுதுறை மேலமருத்துவக்குடியில் உள்ள அன்புவின் வீட்டிற்கு சென்றபோது அவரது  வீடு பூட்டி இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தில் விசாரணை செய்த போலீசார், நேற்று இரவு, அன்பு தனது மனைவியுடன் தஞ்சையில் உள்ள தனியார் மனநிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து அன்புவிடம் விசாரணை செய்வதற்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். தொழில் ரீதியாக அன்பு, வெங்கடேசனுக்கு பல லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததாக தெரிய வந்துள்ளது.  கொலை செய்ததற்கு காரணம் குறித்து,  அன்புவிடம் விசாரணை செய்ததால், உண்மையான தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
Embed widget