மேலும் அறிய

வெளிநாட்டு மோகத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த முதியவர் -  தஞ்சையில் நடந்த பரிதாபம்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சையை சேர்ந்த முதியவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சையை சேர்ந்த முதியவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை கீழ வாசல் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக பல இடங்களில் முயற்சி செய்துள்ளார். அப்போது அவருடைய மெயிலுக்கு அமெரிக்காவில் வேலை இருப்பதாக கூறி ஒரு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அந்த தகவலில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு அந்த முதியவர் கேட்டுள்ளார். செல்போனில் பேசிய மர்ம நபர், வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்காக விசா உட்பட பல கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.8.75 லட்சம் பணம் கேட்டுள்ளார்.


வெளிநாட்டு மோகத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த முதியவர் -  தஞ்சையில் நடந்த பரிதாபம்

இதையடுத்து அந்த மர்ம நபர் கூறிய படி ரூ.8.75 லட்சத்தை வங்கி கணக்கில் முதியவர் செலுத்தியுள்ளார். நாட்கள் பல கடந்தும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த முதியவர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர். இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்களிடம் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

 


 

கார்கள் திருடிய மர்மநபர்கள்

தஞ்சை பாரதிதாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (50). இவர் நியூ ஹவுசிங் யூனிட் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய அலுவலகம் எதிரே இரண்டு கார்களை நிறுத்தியிருந்தார். இந்த 2 கார்களை மர்மநபர்கள் திருடிசென்று விட்டனர். இதுகுறித்து அன்பழகன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) என்பவர் தஞ்சை ரஹ்மான் நகரில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர்  திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பைக்கை பல இடங்களில் தேடிபார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. அன்பழகனும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இந்த புகார்களின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெகடர் ஜெயமோகன்சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.