மேலும் அறிய

வெளிநாட்டு மோகத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த முதியவர் -  தஞ்சையில் நடந்த பரிதாபம்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சையை சேர்ந்த முதியவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சையை சேர்ந்த முதியவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை கீழ வாசல் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக பல இடங்களில் முயற்சி செய்துள்ளார். அப்போது அவருடைய மெயிலுக்கு அமெரிக்காவில் வேலை இருப்பதாக கூறி ஒரு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அந்த தகவலில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு அந்த முதியவர் கேட்டுள்ளார். செல்போனில் பேசிய மர்ம நபர், வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்காக விசா உட்பட பல கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.8.75 லட்சம் பணம் கேட்டுள்ளார்.


வெளிநாட்டு மோகத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த முதியவர் -  தஞ்சையில் நடந்த பரிதாபம்

இதையடுத்து அந்த மர்ம நபர் கூறிய படி ரூ.8.75 லட்சத்தை வங்கி கணக்கில் முதியவர் செலுத்தியுள்ளார். நாட்கள் பல கடந்தும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த முதியவர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர். இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்களிடம் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

 


 

கார்கள் திருடிய மர்மநபர்கள்

தஞ்சை பாரதிதாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (50). இவர் நியூ ஹவுசிங் யூனிட் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய அலுவலகம் எதிரே இரண்டு கார்களை நிறுத்தியிருந்தார். இந்த 2 கார்களை மர்மநபர்கள் திருடிசென்று விட்டனர். இதுகுறித்து அன்பழகன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) என்பவர் தஞ்சை ரஹ்மான் நகரில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர்  திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பைக்கை பல இடங்களில் தேடிபார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. அன்பழகனும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இந்த புகார்களின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெகடர் ஜெயமோகன்சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget