மேலும் அறிய

இரண்டாவது கணவர்... நான்காவது குழந்தை... மலைப்புதரில் பிரசவம்... தாய்,சேய் சாவு... சேலத்தில் அதிர்ச்சி க்ரைம்!

‛‛ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதால், நான்காவதாக குழந்தை பிறந்தால், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தங்களை தவறாக பேசுவார்கள் என்று பயந்தது தம்பதி’’

சேலம் அடுத்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பார்வதிக்கும் , நாமக்கல்லைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மனஸ்தாபம் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த பார்வதி, தனிமையில் வசித்து வந்தார். 

அப்போது, ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி புதுக்காலனி பகுதியில் வசிக்கும், 25 வயதான பூபதி என்பவருடன் பார்வதிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் காதலித்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த கையோடு சீலநாயக்கன் பட்டியில் குடியேறி அவர்கள், அங்குள்ள கட்டுமானப்பணிகளுக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில், முதல் கணவருக்கு பிறந்த 12 வயது மகனையும் அவர்கள் வளர்த்து வந்தனர். 

இந்த நிலையில் தான், பார்வதி மீண்டும் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதால், நான்காவதாக குழந்தை பிறந்தால், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தங்களை தவறாக பேசுவார்கள் என்று பயந்த தம்பதி, கர்ப்பமானதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். 8 மாத கர்ப்பிணியான பார்வதிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டுள்ளார்.

 

சத்தம் கேட்டு யாராவது வந்தால், பிரச்சனை ஆகி விடும் என்று பயந்த பூபதி, தனது மனைவியை வீட்டிலிருந்து கிளப்பி வெளியே வேறு பகுதி அழைத்துச் சென்றார். நாழிக்கல்பட்டி துர்க்கையம்மன் கோயில் அருகே உள்ள மலைப்பகுதி புதர் ஒன்றுக்கு மனைவியை அழைத்துச் சென்ற பூபதி, அங்கு தானே மனைவிக்கு பிரசவம் பார்க்க தயாரானார். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், அது இறந்த நிலையில் பிரசவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து அருகில் உள்ள புதரில் குழி தோண்டி, அந்த குழந்தையை புதைத்தார் பூபதி.

இந்த நேரத்தில் திடீரென மனைவி பார்வதிக்கு வலிப்பு ஏற்பட்டது. துடித்துப் போன அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவ்வழியாக வந்தவர்கள் இதை கண்டு,  மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், பார்வதியின் சடலத்தை கைப்பற்றியதுடன், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தையும் கைப்பற்றினர். சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக இரு சடலங்களும் அனுப்பப்பட்ட நிலையில், கணவர் பூபதியை போலீசார் கைது செய்தனர். 

தெரிந்தே உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் குழந்தை இறந்து தான் பிறந்ததா, அல்லது கொலை செய்யப்பட்டதா? பார்வதி இறப்பு, திட்டமிட்ட கொலையா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே பிரசவம் செய்ய முயன்று, மனைவியும்,  குழந்தையும் உயிரிழந்த சம்பவம், சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
Embed widget