மேலும் அறிய

மதுபோதையில் படுத்து உறங்கிய காவலர்.. ‘நான் அயோக்யன்தான், என்ன பண்ணுவ?’ - காவலர் மிரட்டும் வீடியோ வைரல்

உறங்கிய காவலர்களை இரண்டு மணி நேரமாக எழுப்ப முடியாமல் திணறியே உணவக உரிமையாளர்.

சேலம் மாநகர் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் உணவருந்தியுள்ளனர். அதில் ஒருவர் கடையின் மேசை மீது தலைவைத்து அங்கேயே போதையில் மயங்கியுள்ளார். மற்றொருவர், அவர்கள் வந்த காருக்கு சென்று உறங்கியுள்ளார். பின்னர் ஒரு மணி நேரமாகியும் உணவக மேஜையில் உறங்கிக் கொண்டிருந்த நபரை உணவகத்தின் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.  

மதுபோதையில் படுத்து உறங்கிய காவலர்.. ‘நான் அயோக்யன்தான், என்ன பண்ணுவ?’ - காவலர் மிரட்டும் வீடியோ வைரல்

உடனே, இதுகுறித்து அவர் அம்மாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே போதையில் வந்தவர்கள் சேலம் மாவட்ட குற்றப்பிரிவை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவசக்தி மற்றும் காவலர் செந்தில் குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒருவழியாக இருவரையும் எழுப்பியுள்ளனர். இருந்தும் கடையிலிருந்து புறப்படாமல் நின்றுகொண்டிருந்த காவலர்களை கடை உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிளம்பிச்செல்லுமாறு சொல்லியதாக தெரிகிறது. ஆனால் நாங்கள் இங்கேதான் நிற்போம் எங்கு வேண்டுமானாலும் தூங்குவோம் நான் அயோக்யன்தான் என்ன பண்ணுவ? என்று பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துள்ளார். 

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு கூறியதால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அம்மாபேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இரண்டு காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget