மேலும் அறிய

Crime: தற்கொலை செய்ய நினைத்த அண்ணன்...சயனைடு கலந்த மதுவை குடித்த தம்பி; பறிபோன நண்பனின் உயிர்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் அண்ணன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

சேலம் மாநகர முள்ளுவாடி கேட் மகான் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். வெள்ளி தொழிலாளி. இவர் தம்பி சதாம் உசேன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது அண்ணன் வீட்டின் பீரோவுக்கு அடியில் இருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த அசேன் என்பவருடன் முள்ளுவாடி கேட்டில் உள்ள மதுபான பாருக்கு வந்துள்ளார். அங்கு சதாம் உசேன் அந்த மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் இரண்டு பேரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை அருகில் மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் இருவரையும் தூக்கி பார்த்தபோது வாயில் இருந்து நுரையும் ரத்தமும் வந்துள்ளது. உடனடியாக இருவரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்ததில் சயனைடு கலந்த மதுவை குடித்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அசேன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் உதவி கமிஷனர் வெங்கடேஷ், எஸ்ஐ கோகிலா தலைமையிலான சேலம் டவுன் காவல்துறையினர் டாஸ்மாக் பாருக்கு சென்று விசாரித்தனர். 

Crime: தற்கொலை செய்ய நினைத்த அண்ணன்...சயனைடு கலந்த மதுவை குடித்த தம்பி; பறிபோன நண்பனின் உயிர்

அப்போது அவர்கள் இருவரும் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கவில்லை என்பது உறுதியானது. பின்னர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் சதாம் உசேனின் அண்ணன் ஜாகிர் உசேனுக்கு கடந்த புதன்கிழமை அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஜாகிர் உசேன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து அருகில் இருந்த மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி வந்து வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு கலந்து வைத்துள்ளார். அந்த நேரத்தில் இன்னும் இரண்டு நாளில் சில வேலைகளை செய்து முடித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து, அந்த சயனைடு கலந்த குவாட்டர் பாட்டிலை பீரோவுக்கு அடியில் வைத்துள்ளார். அந்த மது பாட்டிலை தான் சதாம் உசேன் எடுத்துக் கொண்டு வந்து தனது நண்பர் அசேனுடன் சேர்ந்து குடித்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சதாம் உசேன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Embed widget