மேலும் அறிய

ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி , ஜாமீனில் எடுக்காமல் ஏமாற்றிய வழக்கறிஞரை தாக்கிய ரவுடி

பணம் வாங்கிக் கொண்டு ரவுடியை ஜாமீனில் எடுக்காமல் ஏமாற்றிய வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய ரவுடி கைது.

பணம் திருப்பி தராததால் தாக்குதல்

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் ( வயது 30 ) வழக்கறிஞரான. இவர் மீனாம்பாள் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரவிந்த் என்பவர் தினேஷ் குமாரிடம்  பணம் கேட்டுள்ளார். தினேஷ் குமார் என்னிடம் பணம் இல்லை எனக் கூறவே அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 600 ரூபாய் பணத்தைப் பறித்து சென்றுள்ளார். தினேஷ்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம்

கொடுங்கையூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , வியாசர்பாடி சி - கல்யாணபுரம் மெயின் தெரு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ( எ )டைகர் அரவிந்த் ( ( வயது 32 ) என்ற ரவுடி இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை யடுத்து டைகர் அரவிந்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்கு ஒன்றில் அரவிந்த் கைதாகி சிறைக்குச் சென்ற போது வழக்கறிஞரான தினேஷ் குமாரிடம் ஜாமீனில் எடுப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் தினேஷ் குமார் அரவிந்தை ஜாமினில் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் அரவிந்த் ஜாமினில் வெளியே வந்து தான் கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைக் கேட்டு வழக்கறிஞர் அரவிந்தை தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவி மீது சந்தேகப்பட்டு , கத்தியால் வெட்ட முயன்ற கணவன்

சென்னை ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலை நான்காவது தெருவை சேர்ந்தவர் கர்ணன் ( வயது 53 ) இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. சுமதி ( வயது 44 ) என்ற மனைவியும் ஹரிணி ( வயது 23 ) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் , குடிபோதையில் வீட்டிற்கு வந்த கர்ணன் தனது மனைவியை சந்தேகப்பட்டு தொடர்ந்து அவதூறான வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த சிறிய கத்தியை எடுத்து தனது மனைவியை வெட்ட சென்றுள்ளார். அப்பொழுது இவர்களது மகள் ஹரிணி என்பவர் தடுத்ததில் ஹரணிக்கு முழங்கையில் பலத்த வெட்டுக்ாகாயம் விழுந்தது.

கையில் - 15 தையல்கள் 

அக்கம் பக்கத்தினர் அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டு கையில் சுமார் 15 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுமதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கர்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget