மேலும் அறிய

‛ராபின் ஹுட்’டாக மாறி சொந்த வீட்டில் மருகளிடம் நகை திருடிய மாமியர்... ஹாலிவுட் இம்ப்ரெஷனாம்!

கரடி வேடமிட்டு வந்தவர்கள் தனக்கு மயக்க ஊசி போட்டு வீட்டில் இருந்த ஆறு சவரன் நகையை திருடி சென்றதாக 100 க்கு போன் செய்து நாடகமாடி பணத்தை திருடிய பெண்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் உள்ள ஆவுடையம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி அம்மாள். 55 வயதாகும் இந்த பார்வதி அம்மாள் கோவில்பட்டியின் ராபின் ஹுட்டாக மாறிய சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் தெளிவாக திட்டமிட்டு வீட்டிலேயே ஒரு திருட்டை நிகழ்த்தியவரை அறிவியல் காட்டிக்கொடுத்து விட்டது. அவருடைய திட்டங்களை பார்த்தால் பல ஆங்கில மொழி படங்கள் பார்ப்பவர் போல தோன்றுகிறது. அவர் போலீசாரிடம் ஆடிய நாடகத்தில் நடித்திருப்பதை கேட்கும்போது ஒரு தேர்ந்த நடிகரை தனக்குள் ஒளித்து வைத்து வாழ்ந்து வந்திருக்கிறார் பார்வதி அம்மாள். சம்பவம் அரங்கேறும்போது மட்டுமின்றி மருத்துவர்களிடமும், மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகும் மயக்கம் வருவது போலும் நடித்தது போலீசார் பலரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சொந்த வீட்டிலேயே நாடகமாடி நகைகளை திருட முயன்றது குடும்பத்தார் இடையே மன கசப்பை ஏற்படுத்தி உள்ளது. 

‛ராபின் ஹுட்’டாக மாறி சொந்த வீட்டில் மருகளிடம் நகை திருடிய மாமியர்... ஹாலிவுட் இம்ப்ரெஷனாம்!

பார்வதி அம்மாள் புதன்கிழமை இரவு வீட்டில் தனிமையில் இருந்திருக்கிறார். அன்று தசரா பண்டிகை என்பதால் பண்டிகைக்கு வேடம் அணிந்து பக்தர்கள் வருவது தூத்துக்குடி திருநெல்வேலி பார்டர்களில் உள்ள ஊர்களின் வழக்கம். அதாவது குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் கோலாகல விழாவுக்கு விதவிதமாக வேடமிட்டு பக்தர்கள் செல்வார்கள். இதையெல்லாம் இணைத்து ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி நகைகளை எடுத்து வேறு இடத்தில் ஒளிய வைத்து விட்டு, 100 என்னும் அவசர காவல் உதவிக்கு போன் செய்து, கரடி வேடம் அணிந்து வந்த சிலர் தன்னை கட்டிப் போட்டுவிட்டு மயக்க ஊசி செலுத்தி, 6 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார் பரபரப்புடன் பார்வதி அம்மாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்வதி அம்மாளின் உடலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார்கள். மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தப்படவில்லை என்பதை ஆணித்தரமாக உறுதி செய்தனர். இதனால் குழம்பிப்போன போலிஸார் பார்வதி அம்மாளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

‛ராபின் ஹுட்’டாக மாறி சொந்த வீட்டில் மருகளிடம் நகை திருடிய மாமியர்... ஹாலிவுட் இம்ப்ரெஷனாம்!

எல்லாவற்றையும் சரியாக செய்து, மயக்க ஊசி என்ற சிறு துரும்பில் மாட்டிக்கொண்ட பார்வதி அம்மாள் விசாரணையில் தனது தம்பிக்கு உதவி செய்வதற்காக கொள்ளைச் சம்பவம் போல் நாடகம் அரங்கேற்றி அதில் நடித்ததை ஒப்புக்கொண்டார். தனது மருமகள் இசக்கியம்மாளின் நகைகளை திருடி அதனை தனது தம்பி வரதராஜனிடம் கொடுத்து அனுப்பியதும், அவசர போலிஸ் 100 நம்பருக்கு போன் செய்து கொள்ளை நடைபெற்றதாக போலிஸாரிடன் பொய் கூறியதும் அம்பலமானது. இதையடுத்து 55 வயதான பார்வதி அம்மாளை, காவல் ஆய்வாளர் பத்மாவதி, காவல் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி, தலைமைக் காவலர் ஜெயபால், உள்ளிட்டோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
Embed widget