மேலும் அறிய

Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

கொலை செய்யப்பட்ட பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்(65). இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர் காலை ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று விட்டு, மதியம் 12 மணிக்கு மேல் தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் பொன்ராஜை வெட்டிக் கொலை செய்தது. 


Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேசன், காவல் ஆய்வாளர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

இதற்கிடையே, தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக்(33) மற்றும்  அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் விசாரணையில் உள்ள கார்த்திக், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

கொலை செய்யப்பட்ட பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டபோது, அவரது மனைவி பொன்னுத்தாய் வெற்றி பெற்று தலைவராக பணியாற்றினார். மேலும், பொன்ராஜ் எப்போதும் தலைப்பாய் கட்டுடன் இருப்பதால் அவரை தலைப்பாய் கட்டு தலைவர் என்று ஊர் மக்கள் அழைப்பது வழக்கம்.


Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு

 

முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டங்குளத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கார்த்திக், திட்டங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும், திட்டங்குளம் வழியாக வந்து செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொன்ராஜிடம் கொடுத்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆட்டுத் தொழுவத்தில் இருந்த  பொன்ராஜை சந்தித்து, கோரிக்கை மனு குறித்து பேசுவதற்காக கார்த்திக்கும், அவருடன்  சிறுவனும் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், இருவரும் சேர்ந்து, பொன்ராஜை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார், கார்த்திக் மற்றும் சிறுவனை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இருவர் மட்டும் தான் இந்த கொலையை செய்தார்களா, அல்லது வேறு யாரும் உடன் சென்றார்களா, இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வெட்டி படுகொலை செய்யப்பட்ட திட்டங்குளம் பஞ்., தலைவர் பொன்ராஜின் உடல், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் திட்டங்குளம் பஞ்., பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் மருத்துவமனி முன் திரண்டனர். இந்நிலையில், பொன்ராஜை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், விரைவாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொன்ராஜின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கோவில்பட்டி புதுரோட்டில் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.டி.எஸ்.பி., கார்த்திகேயன், டி.எஸ்.பி., வெங்கடேஷ் மற்றும் போலீசார், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சுமார் அரை மணி நேரத்திற்கு பின்  சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இந்த போராட்டத்தினால், கோவில்பட்டி புதுரோட்டில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget