மேலும் அறிய

Crime: பழகிய நண்பரிடமே லட்சத்தை ஆட்டைய போட்ட பலே கில்லாடி - மாட்டிக் கொண்டது எப்படி ?

பொதுமக்கள் தங்கள் வங்கி விபரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ATM Pin, Gpay, Phone pay, போன்ற செயலிகளின் Pin  எண்களை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும், யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் - காவல்துறை

நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் கணேச கண்ணன் (35). இவரது வங்கி கணக்கில் இருந்து மர்ம நபரால் பணம் திருடப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக 18.07.2022-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடிய நபரை விரைந்து கைது செய்யும்படி சைபர் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜூவிற்கு அறிவுறுத்தியதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கணேச கண்ணன் என்பவரும், அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சரவணன்(32), என்பவரும் நண்பராக பழகி‌ வந்துள்ளனர். இந்நிலையில் சரவணன், கணேச கண்ணன் என்பவரின் ஏர்டெல் நம்பரில் அவரது வங்கி கணக்கு  விபரங்கள் இருப்பதை  அறிந்துள்ளார். சரவணன் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன், கணேச கண்ணனிடம் ரூ.10 லட்சம் வங்கியில் கடன் பெற்று தரும்படி கேட்டுள்ளார். கணேச கண்ணன் கடன் பெற்று தர மறுத்துள்ளார். இந்நிலையில், சரவணன் எனது எண்ணுக்கு  Recharge செய்து தரும்படி கணேச கண்ணனிடம்  கேட்டுள்ளார், கணேசகண்ணன், சரவணனிடம் தனது செல்லை கொடுத்து Recharge செய்யும்படி கூறியுள்ளார்.

இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட சரவணன் அவரது வங்கி சேமிப்பு விபரங்கள், வங்கி எண் ஆகியவற்றை அறிந்து கொண்டார். பின் கணேசகண்ணனின் செல் நம்பரை செயலிழக்க செய்து அதே எண்ணை சரவணன் அவர் பெயரில் மாற்றம் செய்து பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை GPay மூலம்  சரவணன் கடன் பெற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில்  தெரியவந்துள்ளது. பின்னர் சைபர் கிரைம் காவல்துறையினர் சரவணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருவதோடு அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மீட்டு கணேச கண்ணனிடம் ஒப்படைத்தனர்‌.

மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய சைபர் கிரைம் காவல்துறையினர், பொதுமக்கள் தங்கள் வங்கி விபரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ATM Pin, Gpay, Phone pay, போன்ற செயலிகளின் Pin  எண்களை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும், யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும்  கேட்டுக் கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!
’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Embed widget