மேலும் அறிய

Crime: நெல்லையில் ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி வீட்டில் 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கொள்ளை குறித்து தொலைபேசி மூலம் வீட்டு உரிமையாளரான சமுத்திரபாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொள்ளை போன பொருட்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ளது மாறன்குளம். இப்பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (வயது 63). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகன் உள்ளூரிலும் மற்றொரு மகன் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி சமுத்திரபாண்டி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு வீடு பூட்டியிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். பின்னர் அதிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்ததோடு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


Crime: நெல்லையில் ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி வீட்டில் 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருட்டு குறித்து பார்வையிட்டனர்.  மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.  தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. கொள்ளை குறித்து தொலைபேசி மூலம் வீட்டு உரிமையாளரான சமுத்திரபாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொள்ளை போன பொருட்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது. அப்போது வீட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


Crime: நெல்லையில் ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி வீட்டில் 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதோடு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட  இருசக்கர வாகனம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், கொள்ளையர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள் மற்றும் கையுறைகள் கிடந்ததும் கண்டறியப்பட்டது. இதனை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதோடு அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கப்பல் அதிகாரி வீட்டில் 45 சவரன் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget