மேலும் அறிய

Crime: கணவனை பிரிந்து வாழும் பெண்களே குறி.. சினிமாவை மிஞ்சும் ப்ளான் போட்ட கொடூரம்.. குவியும் புகார்கள்!

நாகர்கோவிலில் கணவனை பிரிந்து வாழும் பெண்களை மடக்கி உல்லாசமாக இருந்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

நாகர்கோவிலில் கணவனை பிரிந்து வாழும் பெண்களை மடக்கி உல்லாசமாக இருந்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

நாகர்கோவில் மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்த 27 வயதான வாலிபர் மீது குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் தக்கலை டிஎஸ்பி அலுவலகம், குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர்.

அந்த பெண்கள் அளித்த புகார்கள் பின்வருமாறு: குழித்துறையை சேர்ந்த பெண்ணான, நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். 2021ல் எனது செல்போனுக்கு வந்த மிஸ்ட் கால் வந்தது. அதில், மேல்புறம் பகுதியை சேர்ந்த 27 வயதான வாலிபர் ஒருவர் அறிமுகம் ஆனார். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக என்னிடம் கூறி பழகி வந்தார். முதலில் நட்பாக தொடங்கிய எங்களது பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை உண்டாக்கியது. அவரது பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்ட நான், அவரிடம் தனிமையில் நெருங்கி பழகினேன். நானும் அவரும் தனிமையில் இருந்தபோது அவற்றை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தார். என்னை திருமணம் செய்வதாக கூறி என்னிடமிருந்து 15 பவுன் நகைகளையும் வாங்கி சென்றார்.

இந்தநிலையில், அவரது வீட்டில் தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதுபற்றி நான் அவரிடம்  கேள்வி எழுப்பியபோது எடுத்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். மேலும் என்னிடம் பழகியது போன்று இவரது உறவினரான பெண் ஒருவருடனும் பழகி அவரை 2ம் திருமணம் செய்வதாக உறுதியளித்து நெருக்கமாக இருந்து, அந்த பெண்ணையும் மூன்று மாதத்தில் ஏமாற்றியுள்ளார்' என்று தெரிவித்திருந்தார். 

இதேபோன்று, குளச்சலை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதுகுறித்து இந்த பெண் அளித்த புகாரில், 'கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து எனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். பேஸ்புக் பக்கத்தில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து அதன் மூலம் அந்த வாலிபர் என்னிடம் பழகினார். தன்னை இரண்டாம் திருமணம் செய்வதாகவும், குழந்தைகளை பார்த்துக் கொள்வதாகவும் கூறியதால் அவருடன் நெருங்கி பழகினேன். அவர் நாங்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோவில் பதிவு செய்தார். எனது நகை, பணத்தை எல்லாம் கொடுத்தேன்.

இந்தநிலையில்தான், அவரது செல்போனை எதார்ச்சையாக பார்த்த போது பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள், வீடியோக்கள் நிறைய இருந்தன. மேலும் அவற்றை தனித்தனி போல்டரில் பெயர் பதிவு செய்து வைத்துள்ளார். என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டாயே என்று கேட்டதற்கு அவர் என்னை மிரட்டுகிறார்' என்று தெரிவித்து உள்ளார்.

திரைப்படங்களில் வருவதுபோல் ஒரே நேரத்தில் பல பெண்களிடம் நெருக்கமாக பழகி, அவர்கள் ஏமாந்த நேரத்தில் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வந்துள்ளார். இதையே முழுநேர பணியாகவும் செய்து வந்துள்ளார். சரியாக கணவனை இழந்த பெண்கள், கணவனை பிரிந்து தனிமையில் வாழும் பெண்களை குறிவைத்து இந்த நபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். தற்போது, அந்த வாலிபர் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வாலிபர், மேலும் பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுவதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget