மேலும் அறிய

2 கோடி அப்பு..2 கோடி..ரூ. 2.17 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய சாலை ஒரு மாதத்திலேயே பெயர்ந்ததால் பொதுமக்கள் ஆவேசம்..

ரூ. 2.17 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய சாலை ஒரு மாதத்திலேயே பெயர்ந்து சேதமானதால் ஆத்திரமடைந்த கிராம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரையிலான பிரதான சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஒரு மாதத்திற்குள்ளாகவே தார் பெயர்ந்து சேதமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சாலையை முழுமையாக மீண்டும் சீரமைத்துத் தர வேண்டும் என்றும், தரக்குறைவான பணிகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் முழக்கமிட்டனர்.

சாலைத் திட்டத்தின் பின்னணி

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்வரும் புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரையிலான இந்தச் சாலையை, ஆதமங்கலம், காடாகுடி, புங்கனூர், பெருமங்கலம், ரெட்டி கோடங்குடி, மருதங்குடி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாகச் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்ததால், பொதுமக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இந்தச் சாலையைப் புதுப்பிக்க அரசு ஆணையிட்டது. இதன்படி, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலான இச்சாலையை ரூ. 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது.

ஒரு மாதத்திற்குள் பெயர்ந்த சாலை

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்ட இந்த புதிய சாலை, தரமற்ற கட்டுமானப் பொருட்களால் அமைக்கப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை அமைக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பல இடங்களில் தார் கலவை பெயர்ந்து, ஜல்லிக் கற்கள் வெளியேறி, போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் மீண்டும் சேதமடையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், புங்கனூர் பகுதியில் மட்டும் சேதமடைந்த சாலையின் ஒரு பகுதியை மீண்டும் சீரமைப்பதற்கான பணிகள் திடீரென மேற்கொள்ளப்பட்டன. இத்தகவல் ஆதமங்கலம், புங்கனூர், ரெட்டி கோடங்குடி, காடாகுடி உள்ளிட்ட கிராம மக்களுக்குத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குக் திரண்டனர்.

ஆவேசப் போராட்டம்

புதிதாக அமைக்கப்பட்ட முழுச் சாலையுமே தரமற்று இருக்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கண்துடைப்பிற்குச் சீரமைப்புப் பணியை மேற்கொள்வதைக் கண்டித்து பொதுமக்கள் அப்பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

  • புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரையிலான சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு புதிதாகப் போடப்பட்ட முழுச் சாலையையும் தரமாக மீண்டும் சீரமைத்துத் தர வேண்டும்.
  • சாலைத் தரத்தைப் பரிசோதிக்காமல், அலட்சியமாகச் செயல்பட்டு, தரக்குறைவான சாலை அமையக் காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளின் சமாதானம்

பொதுமக்களின் போராட்டத்தைப் பற்றி தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் மற்றும் சீர்காழி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அதிகாரிகள், புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரை சேதமடைந்த சாலைப் பகுதிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் களையப்பட்டு, மீண்டும் முழுமையாகச் சீரமைத்துத் தரப்படும் என்று உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், தற்காலிகமாகத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர் போராட்டம் குறித்த எச்சரிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், "ஆதமங்கலம் முதல் புங்கனூர் வரை ரூ. 2 கோடிக்கு மேல் செலவில் போடப்பட்ட சாலை ஒரு மாதத்திலேயே பெயர்ந்து பயனற்றுப் போனது அரசின் பணத்தை வீணடித்த செயல். அதிகாரிகள் உறுதி அளித்தபடி, இந்தப் பாதையை முழுமையாகவும், தரமாகவும் மீண்டும் சீரமைக்கத் தவறினால், நாங்கள் காவல்துறை அனுமதியோடு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி, சிதம்பரம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
Arappor iyakkam : தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
Embed widget