சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக மாயமான சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மாயமான பள்ளி மாணவி


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி தனது உறவினர் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி, தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.


Chennai Cyclones: பாவம்தான் தலைநகரம்! சென்னையை இதுவரை தாக்கியது இத்தனை புயல்களா? ஓர் அலசல்




போக்சோ வழக்கு பதிவு 


இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி சிறுமியை அவரது வீட்டில், உறவினரான கூலித் தொழிலாளி வந்து விட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து மீண்டும் 9 -ம் தேதி மீண்டும் சிறுமியும், அவரது உறவினரும் மாயமாகி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியும் சிறுமியும் தீவிரமாக தேடி வந்தனர். 


”இதுதான் பருவ மழையை எதிர்கொள்ளும் லட்சணமா?” திமுக அரசை சாடிய இராமதாஸ்..!




உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சிறுமி


இதனை அறிந்து அவர் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருநகரி சாலையில் உள்ள மாந்தோப்பில் சிறுமியும் அவரது உறவினரும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகாத உறவினால் 14 வயதான 9 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி, உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Sachin Tendulkar:"20 வருசமா நாங்க கெத்து" 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக சம்பவம் செய்த சச்சின்! என்ன?


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


Number Plate History: நம்பர் பிளேட் அறிமுகமானது எந்த நாட்டில்? இந்தியாவிற்கு வந்தது எப்போது? நோக்கம் என்ன?


மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


TOP 10 NEWS: 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்! சென்னைக்கு ரெட் அலர்ட் - இதுவரை நம்மைச் சுற்றி!