• தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ம் தேதியும் தேர்வுகள் தொடக்கம்

  • வங்க்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை

  • தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளை மறுநாள் அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

  • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டிருப்பதால் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

  • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு

  • தொடர் மழை எதிரொலி; சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

  • மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 17 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிப்பு

  • சென்னை மணலி அருகே உரத்தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

  • கனமழை காரணமாக சங்கரன்கோயிலில் உள்ள சங்கரன்நாராயண சாமி கோயிலில் புகுந்த மழைநீர்

  • கனமழை, அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை

  • கோவையில் நேற்று ஒரே நாளில் 8 செ.மீட்டர் மழை பதிவானதால் கோவை மக்கள் பெரும் அவதி

  • மும்பையில் பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை

  • குஜராத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

  • பசுமாட்டுத் தொழுவத்தில் படுத்தால் தொழுநோய் குணமாகும் – உத்தரபிரதேச அமைச்சர் பேச்சால் சர்ச்சை

  • ஹேமா கமிட்டி அறிக்கை; கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று சிறப்பு அமர்வு விசாரணை

  • பிரபல நடிகை கடத்தல் வழக்கில் மெமரி கார்டு தொடர்பான விசாரணை அறிக்கை ரத்தா? இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  • 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் – மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தல்

  • ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கம்; விரைவில் ஆட்சி அமைக்கிறார் உமர் அப்துல்லா