மேலும் அறிய

கரூர் அருகே டிராபிக் போலீசை தாக்கிய லாரி டிரைவர் கைது

கரூர் சுங்கசாவடி அருகே டிராபிக் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிராபிக் போலீஸை தாக்கிய லாரி டிரைவரை தாந்தோணி மலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். கரூர் பசுபதி பாளையம் பகுதிக்கு உட்பட்ட டிராபிக் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மதியழகன் கரூர் திருச்சி சாலை சுங்ககேட் அருகே டிராபிக் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, காந்திகிராமம் பகுதியில் இருந்து சுங்கேட் பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சிக்னல் அருகே எல்லைக்கோட்டை தாண்டி நின்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மதியழகன் எல்லை கோட்டை தாண்டி ஏன் நிறுத்தினாய், குடித்திருக்கிறாயா? என கேட்டதோடு, ஓரமாக வருமாறு கூறியுள்ளார். தன்னால் வர முடியாது என அந்த நபர் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 


கரூர் அருகே டிராபிக் போலீசை தாக்கிய லாரி டிரைவர் கைது

 

இதனால், பைக்கில் இருந்து மதியழகன், சாவியை எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், டிராபிக் போலீசை, கையால் தட்டி விட்டதோடு, சட்டையை இழுத்து கிழித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக காயமடைந்த மதியழகன், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நபரும்,காயமடைந்ததாக கூறிய கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிராபிக் போலீஸ் மதியழகனின் புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது டிராபிக் போலீஸ்  தாக்கியவர் கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், என்பதும், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்ததோடு, வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்ற 73 பேர் மீது வழக்கு பதிவு.


கரூர் அருகே டிராபிக் போலீசை தாக்கிய லாரி டிரைவர் கைது

 

கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த காவல் நிலைய போலீசார்களும் கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், மதுவிலக்கு போலீசார்கள் 31 பேர் மீது வழக்கு பதிந்து 329 குவாட்டர் பாட்டில்களையும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் 42 பேர் மீது வழக்குப்பதிந்து 335 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் திருவள்ளுவர் தினத்தன்று ஒரே நாளில் 73 பேர்கள் மீது வழக்கு பதிந்து 672 குவாட்டர் பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget