மேலும் அறிய

கரூர் அருகே டிராபிக் போலீசை தாக்கிய லாரி டிரைவர் கைது

கரூர் சுங்கசாவடி அருகே டிராபிக் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிராபிக் போலீஸை தாக்கிய லாரி டிரைவரை தாந்தோணி மலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். கரூர் பசுபதி பாளையம் பகுதிக்கு உட்பட்ட டிராபிக் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மதியழகன் கரூர் திருச்சி சாலை சுங்ககேட் அருகே டிராபிக் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, காந்திகிராமம் பகுதியில் இருந்து சுங்கேட் பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சிக்னல் அருகே எல்லைக்கோட்டை தாண்டி நின்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மதியழகன் எல்லை கோட்டை தாண்டி ஏன் நிறுத்தினாய், குடித்திருக்கிறாயா? என கேட்டதோடு, ஓரமாக வருமாறு கூறியுள்ளார். தன்னால் வர முடியாது என அந்த நபர் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 


கரூர் அருகே டிராபிக் போலீசை தாக்கிய லாரி டிரைவர் கைது

 

இதனால், பைக்கில் இருந்து மதியழகன், சாவியை எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், டிராபிக் போலீசை, கையால் தட்டி விட்டதோடு, சட்டையை இழுத்து கிழித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக காயமடைந்த மதியழகன், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நபரும்,காயமடைந்ததாக கூறிய கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிராபிக் போலீஸ் மதியழகனின் புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது டிராபிக் போலீஸ்  தாக்கியவர் கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், என்பதும், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்ததோடு, வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்ற 73 பேர் மீது வழக்கு பதிவு.


கரூர் அருகே டிராபிக் போலீசை தாக்கிய லாரி டிரைவர் கைது

 

கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த காவல் நிலைய போலீசார்களும் கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், மதுவிலக்கு போலீசார்கள் 31 பேர் மீது வழக்கு பதிந்து 329 குவாட்டர் பாட்டில்களையும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் 42 பேர் மீது வழக்குப்பதிந்து 335 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் திருவள்ளுவர் தினத்தன்று ஒரே நாளில் 73 பேர்கள் மீது வழக்கு பதிந்து 672 குவாட்டர் பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget