மேலும் அறிய

பிரேக் அப் காதலருக்கு கட்டம் கட்டிய காதலி! 30 போலி இன்ஸ்டா கணக்குகள் மூலம் மாஸ்டர் ப்ளான்!

தன்னுடன் காதலை முறித்த நபரை 30 போலி கணக்குகள் மூலம் தவறாக காவல்துறையிடம் இளம்பெண் ஒருவர் சிக்க வைத்துள்ளார்.

சரியான புரிதல் இல்லாமல் காதல் ஜோடிகளுக்கு இடையில் பிரச்னை வந்து பிரிவது நடப்பதுதான். அது பரஸ்பர பிரிவு என்றால் சிக்கல் இல்லை. ஆனால் சிலர் பிரிவுக்கு பிறகும் வெறுப்பால் சில தேவையில்லாத வேலைகளை செய்வார்கள். காதலிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கசிய விட்டு மிரட்டுவது போன்ற குற்றச்சம்பவங்களில் சில ஆண்கள் ஈடுபடுவதும் உண்டு. அவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் கிடைத்துள்ளன. ஆனால் அதற்கு சற்று மாறாக இங்கு ஒரு பெண் தன்னை பிரேக் அப் செய்த நபரை காவல்துறையில் சிக்க வைக்க பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர் அயர்லாந்து ஐன்ஸ்வோர்த்(20). 20 வயதான இவருக்கும் லூயிஸ்(22) என்ற நபருக்கும் 2019ஆம் ஆண்டு முதல் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் சில நாட்களுக்கு பிறகு லூயிஸ் மற்றும் ஜன்ஸ்வோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அது அவர்களின் காதலை முறிக்கும் அளவிற்கு வேகமாக வளர்ந்துள்ளது. இதனால் இருவரும் தங்களுடைய காதலை பிரேக் அப் செய்துள்ளனர். 

 

அதன்பின்பு ஐன்ஸ்வோர்த் டெக்லான் ரைஸ் என்ற புதிய நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. எனினும் தன்னுடைய பழை காதலன் லூயிஸ் தன்னைவிட்டு திடீரென பிரிந்ததை ஏற்க முடியாமல் அவரை காவல்துறையில் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 30 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை இவர் உருவாக்கியுள்ளார். அந்த கணக்குகளிலிருந்து அவரும் லூயிஸும் எடுத்து கொண்ட படங்களை அனுப்புவது மற்றும் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றை ஐன்ஸ்வோர்த் செய்துள்ளார். 



பிரேக் அப் காதலருக்கு கட்டம் கட்டிய காதலி! 30 போலி இன்ஸ்டா கணக்குகள் மூலம் மாஸ்டர் ப்ளான்!

இதைத் தொடர்ந்து இவற்றை ஆதாரமாக வைத்து கொண்டு காவல்துறையினரிடம் தன்னுடைய முன்னாள் காதலர் லூயிஸ் மீது புகார் அளித்துள்ளார். அவர் தனக்கு இதுபோன்ற ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பவது மட்டுமல்லாமல் விரைவில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக அப்பெண் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை ஏற்று காவல்துறையினர் லூயிஸை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் தான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். எனினும் அப்பெண் அளித்த ஆதாரத்தை வைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

மேலும் இந்த கணக்குகள் தொடர்பாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் இருந்து தரவுகளை கேட்டுள்ளனர். அப்போது அந்நிறுவனம் அளித்த தரவுகளின் படி அந்த 30 கணக்கில் பெரும்பாலானவை ஜன்ஸ்வோர்த்தின் மின்னஞ்சலை வைத்து தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் மீதி கணக்குகள் ஐன்ஸ்வோர்த் பயன்படுத்தும் இணையதளத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை விசாரணை செய்துள்ளனர். அவர் முதலில் தனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். இறுதியில் அவர் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் போலி கணக்குகள் தொடங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய காதலர் தன்னை பிரேக் அப் செய்ததால் மன உளச்சலில் இருந்தப் போது இப்படி ஒரு திட்டத்தை தீட்டியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: வீடு புகுந்து திருட முயன்ற ஜட்டி ஆசாமி... வசமாக சிக்கியதால் வச்சி செய்த ஊர்மக்கள்...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Embed widget