மேலும் அறிய

Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?

Mysuru Affair Murder: தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னையால் பெண்ணின் வாயில் வெடிமருந்தை வைத்து வெடிக்கச் செய்த மைசூர் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mysuru Affair Murder: தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னையால் பெண்ணின் வாயில் வெடிமருந்தை வைத்து வெடிக்கச் செய்த சம்பவம் மைசூரை உலுக்கியுள்ளது.

தகாத உறவால் கொடூர கொலை:

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் அரங்கேறிய கோர சம்பவம் கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருமணமான 20 வயது பெண்ணுடன் தகாத உறவில் இருந்த இளைஞர், அந்த பெண்ணின் வாயில் வெடிமருந்தை வெடிக்கச் செய்து கொடூர கொலையை நிகழ்த்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதில் அந்த பெண்ணின் கீழ் தாடை முற்றிலுமாக சிதைந்து இருப்பதை காண முடிகிறது. 

நடந்தது என்ன?

கொல்லப்பட்ட நபர் ரக்‌ஷிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹுன்சூர் தாலுகாவைச் சேர்ந்த கெரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர், பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அங்கு அந்த பெண் திருமணத்தை மீறி தன்னுடன் உறவில் இருந்த, காதலன் சித்தராஜுடன் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவைச் சேர்ந்த தினக்கூலி ஒருவரை திருமணம் செய்து இருந்த ரக்‌ஷிதா, பெரியபட்னா தாலுகாவில் உள்ள பெட்டடடபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு என்பவருடன் தகாத உறவையும் பின்பற்றி வந்துள்ளார். 

”போன் வெடித்து மரணம்”

இந்நிலையில் தான், கடந்த சனிக்கிழமையன்று கப்படி பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற ரக்‌ஷிதா - சித்தராஜு ஜோடி, பிறகு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அறையில் இருந்த பலத்த சத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் அங்கு ஓடி வர, ரக்‌ஷிதா முகம் சிதைந்து ரத்தம் பெருக்கெடுத்த ஓடி உயிரிழந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்சார வயர்கள் அறையில் சிதறி கிடக்க, செல்போன் வெடித்ததில் ரக்‌ஷிதா உயிரிழந்ததாக சித்தராஜு தெரிவித்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, அவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

வாயில் வெடிமருந்து திணிப்பு..

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சித்தராஜு முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தீவிர விசாரணையில், “இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவதாம் முற்றியதில், தான் மறைத்து வைத்து இருந்த வெடிமருதுகளை ரக்‌ஷிதாவின் வாயில் திணித்து ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி வெடிமருந்தை வெடிக்கச் செய்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. சித்தராஜு கைது செய்யப்பட்டுள்ளார்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை:

இதனிடையே, லாட்ஜில் இருந்து ரக்‌ஷிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் அரங்கேறும் கொலைகள், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget