மேலும் அறிய

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

’’காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கூலிப்படையினர் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்’’

புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினர் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி (53). மாவட்ட பா.ம.க. செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தார். திருநள்ளாறு மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் கட்சி அலுவலகம் இருந்தது. 


காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இந்தநிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேவமணிக்கும் அவரது வீட்டுக்கு எதிரே உள்ள இடம் தொடர்பாக மணிமாறன் என்பவருக்கும் அடிக்கடி அடிதடி சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இந்த தகராறில் தான் தேவமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், வீரவல்லபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லெனின் பாரதி, பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து, தேவமணியை கொலை செய்த கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில், கொலை நடந்த மறுநாள் முக்கிய குற்றவாளியான மணிமாறனை (28) பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலை- ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இதில், மணிமாறனுக்கு உடந்தையாக அவரது நண்பர்களான திருநள்ளாறு அரங்கநாதர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி (59), மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, இலுப்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54), மயிலாடுதுறை கூட்டுறவு நகர் 3 வது குறுக்கு தெருவை சேர்ந்த அருண் (31) மற்றும் சார்லஸ் ஆகியோருக்கு தேவமணி கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதாவது இவர்கள் 5 பேரும் சேர்ந்து 6 பேர் கொண்ட கூலிப்படையினரை ஏவி தேவமணியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணி மாறன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் ஆகிய 4 பேரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தேவமணி கொலையில் தொடர்புடைய சார்லஸ் மற்றும் கூலிப்படையினர் 6 பேரை போலீசார் வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget