மேலும் அறிய

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தொர்பாக தனியார் தொழிற்சாலை எச்.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகள் சைனியா. இவர் மாமண்டூர் பகுதியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில், கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சைனியா வழக்கம்போல மாமண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சைனியா  வேலைக்கு சென்ற சென்ற பின்னர், அவரது பெற்றோருக்கு தொழிற்சாலையிலிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் சைனியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாகவும், இதனால் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது  புகார்!
 
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சைனியாவை கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். சைனியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது  புகார்!
 
 
இந்நிலையில் பெண்ணின் தந்தை வேளாங்கண்ணி, தனியார் குளிர்பான கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஒருவர் தான், தனது மகள் சைனியாவின் தற்கொலைக்கு காரணம் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நேற்று காலை படாளம் போலீசில் புகார் செய்தார். அவருடன் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கம்பெனியின் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது  புகார்!
 
 பின்னர் காவல்துறை அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் உறவினர்களிடையே உறுதியளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து இளம் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், கம்பெனியின் எச்.ஆர் பிரிவில் பணிபுரியும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
 
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வு இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. எக்காரணம் கொண்டும் மனம் அழுத்தம் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரக்கூடாது. அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Embed widget