மேலும் அறிய

சுப்பி எடுக்க வந்த இருளர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வனக்காவலர் கைது!

தன் மீது நடந்த பாலியல் அத்துமீறலை தன் தங்கை உதவியோடு வீடியோ எடுத்த இளம் பெண்ணின் செயலால், வனக்காவலர் கையும் களவுமாக பிடிபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் பகுதியில்  இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.பகுதி ரகுநாத சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரிகா வயது (26) இவர் இருளர்  இனத்தைச் சேர்ந்தவர். இவர்  நேற்று சகோதரி உள்ளிட்டோருடன் விறகு வெட்டுவதற்காக வாழ்குடை கிராம காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.      

 சுப்பி எடுக்க வந்த இருளர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வனக்காவலர் கைது!

அப்போது அங்கு வந்த ஆரணி சரக வனக்காவலர் செல்வராஜ் என்பவர் அங்கு சென்று நீங்கள் யார் என்று கேட்டுள்ளார் அப்போது இருவரும் விறகு உடைப்பதற்காக வந்தோம் என்று கூறியுள்ளனர். அப்போது வனக் காவலர், உன்னிடம் பேசவேண்டும் என்று கூறி சந்திரிகாவை தனியாக அழைத்துள்ளார். தனியாக வந்த அவரிடம், ‛நீ ரொம்ப அழகா இருக்க... உன்னுடைய இரண்டு கண்கள் ரொம்ப அழகாக இருக்கிறது; உன்னைப் பார்த்த உடன் எனக்கு காதல் செய்ய தூண்டுகின்றது....’ என்று தவறாக பேசியுள்ளார். ‛உன்னுடைய தொலைபேசிஎண் கொடுத்தால் நாம் தினசரி பேசிக்கொள்ளாம் என்று கூறிய அவர், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து இளம்பெண் சந்திரிகா, அங்கிருந்து  உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு அழுதுக்கொண்டே வந்துள்ளார். பின்னர் காட்டுப்பகுதியில் ஏற்ப்பட்ட சம்பவத்தை பெற்றோர்களிடமும் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

சுப்பி எடுக்க வந்த இருளர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வனக்காவலர் கைது!

இதையடுத்து  சந்திரிகா பெரணமல்லூர் காவல் நிலையத்தில் வனக்காவலர் செல்வராஜ் குறித்து காவல் ஆய்வாளர் நந்தினி தேவியிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வனக்காவலர் செல்வராஜை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன் மீதான தவறை செல்வராஜ் ஒப்புக்கொண்டார். 

சுப்பி எடுக்க வந்த இருளர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வனக்காவலர் கைது!

   இதையடுத்த பழங்குடியினர் பெண்ணை வழிமறித்து தடுத்து நிறுத்துதல், பாலியல் குற்றம் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் வனகாவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் சந்திரிகாவை  வனக்காவலர் செல்வராஜ்  பாலியலுக்கு அழைத்த போது  வனகாவலருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தது  சந்திரிக்காவுக்கு  இந்த விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிட தக்கது. 

இன்றைய முக்கியச் செய்திகள்...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget