மேலும் அறிய

Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை

பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அதனைக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் அங்குள்ள ஏலூரு மாவட்டத்தில் உள்ள பெடப்பாடு மண்டலம் நாயுடுகுடம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ரிஷி பாபு என்ற மகன் உள்ள நிலையில் வினோத்துக்கு குழந்தை பிறந்ததில் இருந்தே சந்தேகம் வர தொடங்கியுள்ளது. 

அவர் தன்  தன் மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகமடைந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இந்த பிரச்னையில் ரிஷி பாபு தனக்குப் பிறந்த மகன் அல்ல என பிட்டா வினோத் உறுதியாக நம்பி வந்துள்ளார். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். முதலில் பொறுத்து பொறுத்துப் பார்த்த அவரின் மனைவி, ஒரு கட்டத்தின் வெறுப்பாகி வினோத்தை பிரிய முடிவெடுத்திருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தன் மகனைப் பெடபாடுவில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2024ம் மீண்டும் மனைவி,மகனைத் தேடி பிட்டா வினோத் பெடபாடு வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பின்  பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு நடைபெற்றது. அதன்பிறகு வினோத் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்று நம்பிய அவரது மனைவி,மகனுடன் நாயுடுகுடம் வீட்டுக்குத் திரும்பினார் அங்கு சென்ற பிறகும் வினோத்தின் நடத்தையில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை.  துன்புறுத்தல் அதிகரித்த நிலையில் நீ என் மகன் இல்லை என்று கூறி தன் குழந்தையை சித்திரவதை செய்துள்ளார். அவனை பள்ளிக்கு கூட அனுப்பாமல் தடுத்துள்ளார். பிட்டா வினோத் மகன் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையை அணுகி புகாரளித்தான். 

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கி பிட்டா வினோத்தை எச்சரித்தனர். ஆனாலும் அவரது மனநிலை சிறிதும் மாறவில்லை. வழக்கத்தை விட மகன் ரிஷி பாபுவை துன்புறுத்த தொடங்கினார். அந்த வகையில் நேற்று முன்தினம்  பெடபாடுவில் உள்ள சிறுவனின் தாத்தா பண்டி ரமேஷுக்கு பிட்டா வினோத்தின் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் வீட்டிற்கு வெளியே ரிஷி பாபு உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பண்டி ரமேஷ் மற்றும் உறவினர்கள் ரிஷிபாபு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த உறவினர்கள், இது தந்தை பிட்டா வினோத்தில் செய்யப்பட்ட கொலை என்று கருதி, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசார்ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Embed widget