மேலும் அறிய

Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை

பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அதனைக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் அங்குள்ள ஏலூரு மாவட்டத்தில் உள்ள பெடப்பாடு மண்டலம் நாயுடுகுடம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ரிஷி பாபு என்ற மகன் உள்ள நிலையில் வினோத்துக்கு குழந்தை பிறந்ததில் இருந்தே சந்தேகம் வர தொடங்கியுள்ளது. 

அவர் தன்  தன் மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகமடைந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இந்த பிரச்னையில் ரிஷி பாபு தனக்குப் பிறந்த மகன் அல்ல என பிட்டா வினோத் உறுதியாக நம்பி வந்துள்ளார். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். முதலில் பொறுத்து பொறுத்துப் பார்த்த அவரின் மனைவி, ஒரு கட்டத்தின் வெறுப்பாகி வினோத்தை பிரிய முடிவெடுத்திருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தன் மகனைப் பெடபாடுவில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2024ம் மீண்டும் மனைவி,மகனைத் தேடி பிட்டா வினோத் பெடபாடு வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பின்  பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு நடைபெற்றது. அதன்பிறகு வினோத் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்று நம்பிய அவரது மனைவி,மகனுடன் நாயுடுகுடம் வீட்டுக்குத் திரும்பினார் அங்கு சென்ற பிறகும் வினோத்தின் நடத்தையில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை.  துன்புறுத்தல் அதிகரித்த நிலையில் நீ என் மகன் இல்லை என்று கூறி தன் குழந்தையை சித்திரவதை செய்துள்ளார். அவனை பள்ளிக்கு கூட அனுப்பாமல் தடுத்துள்ளார். பிட்டா வினோத் மகன் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையை அணுகி புகாரளித்தான். 

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கி பிட்டா வினோத்தை எச்சரித்தனர். ஆனாலும் அவரது மனநிலை சிறிதும் மாறவில்லை. வழக்கத்தை விட மகன் ரிஷி பாபுவை துன்புறுத்த தொடங்கினார். அந்த வகையில் நேற்று முன்தினம்  பெடபாடுவில் உள்ள சிறுவனின் தாத்தா பண்டி ரமேஷுக்கு பிட்டா வினோத்தின் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் வீட்டிற்கு வெளியே ரிஷி பாபு உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பண்டி ரமேஷ் மற்றும் உறவினர்கள் ரிஷிபாபு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த உறவினர்கள், இது தந்தை பிட்டா வினோத்தில் செய்யப்பட்ட கொலை என்று கருதி, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசார்ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget