மேலும் அறிய

Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை

பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அதனைக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் அங்குள்ள ஏலூரு மாவட்டத்தில் உள்ள பெடப்பாடு மண்டலம் நாயுடுகுடம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ரிஷி பாபு என்ற மகன் உள்ள நிலையில் வினோத்துக்கு குழந்தை பிறந்ததில் இருந்தே சந்தேகம் வர தொடங்கியுள்ளது. 

அவர் தன்  தன் மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகமடைந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இந்த பிரச்னையில் ரிஷி பாபு தனக்குப் பிறந்த மகன் அல்ல என பிட்டா வினோத் உறுதியாக நம்பி வந்துள்ளார். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். முதலில் பொறுத்து பொறுத்துப் பார்த்த அவரின் மனைவி, ஒரு கட்டத்தின் வெறுப்பாகி வினோத்தை பிரிய முடிவெடுத்திருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தன் மகனைப் பெடபாடுவில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2024ம் மீண்டும் மனைவி,மகனைத் தேடி பிட்டா வினோத் பெடபாடு வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பின்  பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு நடைபெற்றது. அதன்பிறகு வினோத் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்று நம்பிய அவரது மனைவி,மகனுடன் நாயுடுகுடம் வீட்டுக்குத் திரும்பினார் அங்கு சென்ற பிறகும் வினோத்தின் நடத்தையில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை.  துன்புறுத்தல் அதிகரித்த நிலையில் நீ என் மகன் இல்லை என்று கூறி தன் குழந்தையை சித்திரவதை செய்துள்ளார். அவனை பள்ளிக்கு கூட அனுப்பாமல் தடுத்துள்ளார். பிட்டா வினோத் மகன் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையை அணுகி புகாரளித்தான். 

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கி பிட்டா வினோத்தை எச்சரித்தனர். ஆனாலும் அவரது மனநிலை சிறிதும் மாறவில்லை. வழக்கத்தை விட மகன் ரிஷி பாபுவை துன்புறுத்த தொடங்கினார். அந்த வகையில் நேற்று முன்தினம்  பெடபாடுவில் உள்ள சிறுவனின் தாத்தா பண்டி ரமேஷுக்கு பிட்டா வினோத்தின் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் வீட்டிற்கு வெளியே ரிஷி பாபு உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பண்டி ரமேஷ் மற்றும் உறவினர்கள் ரிஷிபாபு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த உறவினர்கள், இது தந்தை பிட்டா வினோத்தில் செய்யப்பட்ட கொலை என்று கருதி, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசார்ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget