மேலும் அறிய

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தோம், அதுக்கு தான் செயின் திருட வந்தோம் - தருமபுரியில் அதிர்ச்சி

தருமபுரி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை தொலைத்து விட்டு, தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து, 25 சவரன் தங்க நகை மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 

தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் இருவரும தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இந்த இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடு பழக்கம் வைத்திருந்து, அதில் இலட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்து, ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததாகவும் தெரியவந்தது

இதனை எடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனங்களில் சென்று சாலையில், நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பெறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. 


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திப்பம்பட்டி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் கயல்விழி என்பவர் இரவு பணி முடிந்து தருமபுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது  செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலியை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்றுள்ளனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கயல்விழி காயம் அடைந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தர்மபுரி மதிக்கம்பாளையம் காவல் நிலையத்தில் கயல்விழி புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வேடியப்பன் மற்றும் ராஜா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பொறுப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா இருவரையும் மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இரண்டு இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து விட்டு பண தேவைக்காக பல்வேறு மாவட்டங்களில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget