மேலும் அறிய

சிறுவனுக்கு பாலியல் தொல்லை...பயத்தில் கிணற்றில் தள்ளிக் கொன்ற மாணவன் - தருமபுரியில் அதிர்ச்சி

சிசிடிவியில் சிறுவன், 12-ம் வகுப்பு மாணவனுடன் சென்றது பதிவாகி இருந்தது. தொடர்ந்து மீண்டும் சிறுவன் இல்லாமல், மாணவன் மட்டும் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.

தருமபுரி அருகே பத்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வெளியில் சொல்லிவிடுவான் அச்சமடைந்து, கிணற்றில் தள்ளி கொலை செய்த, 12-ம் வகுப்பு மாணவனை காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 

சிறுவன் காணவில்லை

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி, பல ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 10 சிறுவன் அரசு துவக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். மேலும், பங்குனி உத்திரத்திற்காக பழனிக்கு செல்வதற்கு சிறுவன் மாலை அணிந்து இருந்துள்ளான். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை எனவும் மாலை 4 மணி அளவில் சிறுவன் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகல் 12 மணிக்கு பள்ளியில் இருந்த மாணவனை அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்  அழைத்துச் சென்றதாக பார்த்த சிலர் கூறியுள்ளனர். மேலும் மாலை வரை சிறுவன் கிடைக்காததால், பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
 
மேலும், சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ் அப், முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் பரப்பியுள்ளனர். இதனை அடுத்து அதியமான்கோட்டை காவல் துறையினர் மிட்டாரெட்டி அள்ளி கிராமத்திற்கு சென்று 12-ம் வகுப்பு மாணவன் மற்றும் கிராமத்தில் விசாரணையை தொடங்கினர். அப்பொழுது 12-ம் வகுப்பு மாணவனை அழைத்துக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  ஆய்வு செய்தனர். அதில் சிறுவன், 12-ம் வகுப்பு மாணவனுடன் சென்றது பதிவாகி இருந்தது. தொடர்ந்து மீண்டும் சிறுவன் இல்லாமல், மாணவன் மட்டும் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
 

பாலியல் தொல்லை

தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் என்பது தெரியவந்தது. மாணவன், அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். மேலும் சிறுவனுக்கு என்ன ஆனது என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த தருமபுரி டிஎஸ்பி சிவராமன், இரவு 10 மணி அளவில் பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அருகில் உள்ள ஊர் தலைவரின் விவசாய கிணற்றில் சிறுவனை தள்ளி விட்டு வந்ததாக, தெரிவித்துள்ளார். 

கொலை

மேலும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை செய்து, அதை வெளியே சொல்லிவிடுவான் என  பயந்து கொண்டு அந்த சிறுவனை கிணற்றில் தள்ளி விட்டு வந்ததாக விசாரணையில் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மற்றும் காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் தேடும் பணியில் ஈடுபட்டு சிறுவனின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மாணவன் ஒருவர் மட்டுமே இந்த சம்பவத்தை செய்திருக்க முடியாது. இதற்கு உடந்தையாக சிலர் இருப்பார்கள் உரிய விசாரணை செய்து, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முழு விவரம் தெரியும் வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
Arappor iyakkam : தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
Embed widget