![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: சூடா டீ கேட்ட மாமியார்.. அடித்தே கொன்ற மருமகள்..! பகீர் சம்பவத்தில் பின்னணி என்ன..?
சூடான டீ கேட்ட ஆத்திரத்தில் மாமியாரை, மருமகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: சூடா டீ கேட்ட மாமியார்.. அடித்தே கொன்ற மருமகள்..! பகீர் சம்பவத்தில் பின்னணி என்ன..? Crime pudhukottai women arrested for mother law murder case police investigate Crime: சூடா டீ கேட்ட மாமியார்.. அடித்தே கொன்ற மருமகள்..! பகீர் சம்பவத்தில் பின்னணி என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/c9433db771691b656cff29108ee5f37b1678260750902571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime : சூடான டீ கேட்ட ஆத்திரத்தில் மாமியாரை, மருமகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
டீ கேட்ட மாமியார்:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணிக்கு கனகு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்துவிட்டதால் மகனுடன் பழனியம்மாள் வசித்து வந்துள்ளார்.
கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மனைவி, மகன், தாய் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தலைவலி ஏற்பட்டதால் பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் சூடாக டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். தூக்கத்தில் இருந்த கனகுவும் எழுந்து மாமியாருக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
அடித்துக் கொன்ற மருமகள்:
அப்போது டீ சூடாக இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கடும் கோபமடைந்த கனகு அருகில் கிடந்த கம்பியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் சரமாரியாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வலி தாங்க முடியாமல் கத்திய பழனியம்மாளின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது:
பின்னர், உயிரிழந்த பழனியாமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, மாமியாரை கொலை செய்த மருமகள் கனகுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: வட மாநில தொழிலாளியை தாக்கி மர்மநபர்கள் வழிப்பறி - பணம், செல்போன் பறிப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)