மேலும் அறிய

Crime: இந்து பெண்ணை காதலித்ததால் நிகழ்த்திய கொடூரம்..இஸ்லாமிய இளைஞரின் பெற்றோரை அடித்தே கொன்ற கும்பல்!

உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய தம்பதியினரை 3 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய தம்பதியரை  3 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் கொடூரங்கள்:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள், மதக் கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தற்போது உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்து பெண்ணிடம் காதல்:

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி கம்ருல் நிஷா. இந்த தம்பதிக்கு ஷௌகத் என்ற ஒரு மகன் உள்ளார். இளைஞர் ஷௌகத் அதே பகுதியைச் சேர்ந்த  ரூபி என்ற  இந்து பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்  நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2020-ஆம் ஆண்டில் இருந்தே காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இளைஞர் ஷௌகத் மற்றும் ரூபி அவர்களது வீட்டில் பேசி பார்த்தும் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டது.  கடந்த 2020-ஆம் ஆண்டில் இரண்டு பேரும் வீட்டில் இருந்து சென்றுவிட்டனர். இதனை அடுத்து, இருவீட்டாரும் அவர்களை தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர்.  அந்த நேரத்தில் ரூபி மைனர் என்பதால் ஷௌகத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து ஷௌகத் வெளியே வந்தார்.

அடித்துக் கொல்லப்பட்ட தம்பதியினர்:

சிறையில் இருந்து வெளியே வந்த ஷௌகத்  ரூபியை சந்தித்து பேசி வந்துள்ளனர். மீண்டும் இரண்டு பேரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த  ரூபியின் குடும்பத்தினரின் ஷௌகத் பெற்றோரிடம் சண்டை போட்டனர். இதனால் ஷௌகத் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். அதனை கேட்காமல் மீண்டும் ஷௌகத், ரூபியிடம் பழகி வந்துள்ளார்.

பின்னர், ஷௌகத் மற்றும் ரூபியும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனை அடுத்து, மீண்டும் இருவீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஷௌகத் பெற்றோரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்துள்ளது. அவர்கள் வலி தாங்க முடியாமல் கத்தினர். இருப்பினர், அவர்களை தொடர்ந்து அடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget