மேலும் அறிய

Crime: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஆசிப்ஜாவேத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் ஆசிப்ஜாவேத் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில், கேஸ் கட்டிங்கை பயன்படுத்தி 72 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, அவர்கள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஆரிஃப், ஆசாத், குதரத் பாஷா, அப்சர் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 


Crime: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஆசிப்ஜாவேத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அதனைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதின் என்பவரை கர்நாடக மாநில எல்லை அருகே தனிப்படை போலீசார், கடந்த மார்ச் மாதம் கைது செய்து கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார், முக்கிய குற்றவாளியைத் தேடும் பணியில் இறங்கினர், அப்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய ஆய்வாளர் புகழ் தலைமையில் 6 உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்தனர். அப்போது, இந்த வழக்கின் முக்கிய முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவர் ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலைப் பகுதிக்கு இடையே இருக்கும் பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், ஒரு வாரம் முகாமிட்டு தீவிர முயற்சிக்கு பின் ஆசிப்ஜாவேத் துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்த 15 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆசிப்ஜாவேத் என்பவர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீ.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பிடிபட்ட ஆசிப்ஜாவேத் என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Embed widget