மேலும் அறிய

Crime: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஆசிப்ஜாவேத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் ஆசிப்ஜாவேத் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில், கேஸ் கட்டிங்கை பயன்படுத்தி 72 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, அவர்கள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஆரிஃப், ஆசாத், குதரத் பாஷா, அப்சர் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 


Crime: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில்  ஆசிப்ஜாவேத்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அதனைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதின் என்பவரை கர்நாடக மாநில எல்லை அருகே தனிப்படை போலீசார், கடந்த மார்ச் மாதம் கைது செய்து கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார், முக்கிய குற்றவாளியைத் தேடும் பணியில் இறங்கினர், அப்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய ஆய்வாளர் புகழ் தலைமையில் 6 உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்தனர். அப்போது, இந்த வழக்கின் முக்கிய முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவர் ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலைப் பகுதிக்கு இடையே இருக்கும் பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், ஒரு வாரம் முகாமிட்டு தீவிர முயற்சிக்கு பின் ஆசிப்ஜாவேத் துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்த 15 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆசிப்ஜாவேத் என்பவர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீ.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பிடிபட்ட ஆசிப்ஜாவேத் என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget