மேலும் அறிய

Crime: சொத்துக்காக தந்தையையே அடித்துக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆரணி அருகே சொத்திற்காக தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (70), விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (60). இவர்களுக்கு மகன் வெங்கடேசன், மகள்கள் மீனா, மனோன்மணி, ரேகா, அஞ்சலா ஆகியோர் உள்ளனர்.

மேலும், காளியம்மாளுக்கு சகோதரி மட்டும் உள்ளார். அதே கிராமத்தில் காளியம்மாளின் தாய்க்குச் சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில், 5 ஏக்கரை ஒரு மகளுக்கும், மீதமுள்ள 5 ஏக்கர், நிலம், வீடு உள்ளிட்டவற்றை காளியம்மாளின் மகன் வெங்கடேசன் பெயரிலும் கடந்த 1998-ம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வெங்கடேசனுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, ஒரு டிராக்டர் வாங்கி நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும், விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், டிராக்டருக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாதால், அவரது மாமியார் வீட்டிற்கு அவரது குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 


Crime: சொத்துக்காக தந்தையையே அடித்துக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

மேலும், தனது பெயரில் இருந்த 5 ஏக்கர் சொத்தை, தந்தைக்கு தெரியாமல் வெங்கடேசன் தனது மகன் சேஷாத்திரி பெயரில் உயில் எழுதி, சொத்துக்கு கார்டியனாக அவரது மனைவி பெயரை போட்டு சொத்தை மாற்றி எழுதி வைத்துள்ளார். பின்னர், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான சாணார்பாளைம் கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

வெங்கடேசன் சொத்தை மகன் பெயருக்கு உயில் எழுதி வைத்தது அவரது தந்தை பெருமாளுக்கு தெரிந்துள்ளது. இதனால், வெங்கடேசனிடம் உனது பாட்டி சொத்தை உன் அக்கா, தங்கைகளுக்குப் பிரித்து கொடுக்காமல் மொத்த சொத்தையும் உன் மகன் பெயரில் எப்படி எழுதி வைக்கலாம் என பெருமாள் கேட்டுள்ளார். சொத்துக்களை தனது மக்களுக்கு பாகம் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.  இதனால், சில ஆண்டுகளாக தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது 


Crime: சொத்துக்காக தந்தையையே அடித்துக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

 

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே11-ம் தேதி மீண்டும் தந்தை மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த  தனது தந்தை முகத்தில் தலையணை வைத்து அழுத்தி, மூச்சை இறுக்கி  கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு ஆரணி கூடுதல் மாவட்ட அமர் நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் ஆரணி தாலுக்கா காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Embed widget