மேலும் அறிய

Crime: டி.ஜி.பி. பெயரிலே போலீசாரிடம் பண மோசடி...! நைஜீரிய நபர் உள்பட 2 பேர் கைது..!

டி.ஜி.பி. பெயரில் காவலரிடம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.ஜி.பி. பெயரில் மோசடி: 

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12வது பட்டாலியன் போலீஸ் கமாண்டண்டாக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் வந்தது. அதில் தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசுக்கூப்பன் விழுந்திருப்பதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பெயர் மற்றும் புகைப்படத்துடன் தகவல் வந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பல லட்ச ரூபாய் பரிசாக அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதனை உண்மை என நம்பிய கார்த்திகேயன் தனது வங்கி கணக்கில் இருந்து முன்பணமாக சிறிது தொகையை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து மீண்டும் அதே குறுந்தகவல் வாட்ஸ் அப் மூலம்  வந்துள்ளது.  மேல் அதிகாரி தான் அனுப்புகிறார் என எண்ணிய கார்த்திகேயன் அவ்வப்போது 7 அரை லட்சம் வரை வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார்.  மீண்டும் மீண்டும் என 10 முறைக்கு மேல் அதே குறுந்தகவல் வந்து கொண்டிருப்பதை கண்டு ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த அவர் நெல்லை மாவட்ட  சைபர் கிரைம் மூலம் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து பார்த்த நிலையில் குறுந்தகவல் பொய்யானது என தெரிய வந்தது.

மோசடி:

இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நவீன தொழில் நுட்ப உதவிகளுடன் வெளி மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிக்கு இருவர் செல்போன் சிம் கார்டு வாங்கி கொடுத்து உதவியது தெரியவந்தது, அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (32) மற்றும் வினைகுமார் (38) ஆகிய இருவரை ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக கைது செய்திருந்தனர். மேலும் முக்கிய குற்றவாளியை தொடர்ச்சியாக தேடி வந்தனர்.


Crime:  டி.ஜி.பி. பெயரிலே போலீசாரிடம் பண மோசடி...! நைஜீரிய நபர் உள்பட 2 பேர் கைது..!
ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவர்

தொடர் விசாரணையின் பேரில்  பஞ்சாப் மாநிலத்திலும் இதே போன்று ஒரு மோசடி நடைபெற்றது தெரியவந்தது.. எனவே அந்த வழக்கில் கிடைத்த ஆவணங்களையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் கார்த்திகேயனிடம் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40) மற்றும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32) என்பதும் அவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப உதவியோடு இது போன்று நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் உள்பட பலரை ஆன்லைன் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதும் தெரியவந்தது.

கைது:

இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று ஸ்டான்லி மற்றும் ராம்சன் சோகாசரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள் சிம்கார்டுகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டாலும் கூட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் அவர்களை விரைந்து கைது செய்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு நெல்லையில் அதிகாரியிடம் பல லட்சம் மோசடி செய்த வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
TN School Leave: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget