மேலும் அறிய

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

எட்டையபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட விவகாரம்-ரேஷ்மாவின் தந்தை முத்துக் குட்டியை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரது தாயார் மகாலட்சுமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 25 நாட்களில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

எட்டயபுரம் அருகே கடலையூரை அடுத்துள்ள வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா(25). லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துகுட்டி மகள் ரேஷ்மா(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி மாணிக்கராஜா, ரேஷ்மாவுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செய்து வைத்து பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.


காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

இதற்கிடையே, ரேஷ்மாவும் மாணிக்கராஜன் காதல் செய்தது கண்டித்த முத்துக்குட்டி தனது மகளுக்கு விரைவாக திருமணம் செய்ய ஏதுவாக கடந்த ஜூன் 26 ஆம் தேதி முப்புனித நீராட்டு விழா நடத்தியுள்ளார். அதற்கு மறுநாள் மாணிக்க ராஜும் ரேஷ்மாவும் ஊரைவிட்டு தலைமறைவாகினர். எட்டயபுரம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லையென ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி புகார் அளித்திருந்தார். ரேஷ்மா காதலுனுடன் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்தவுடன், எட்டயபுரம் போலீஸார் அவர்களை வீரப்பட்டி வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

இந்நிலையில், கடந்த வாரம் மாணிக்கராஜா தனது காதல் மனைவி ரேஷ்மாவுடன் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு வந்தார். நேற்று காலை சுமார் 12 மணியளவில் தம்பதி வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு மர்மநபர்கள் மாணிக்கராஜா, ரேஷ்மா ஆகியோரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், கோவில்பட்டி டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு, எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கணவன் மனைவி சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்து 25 நாட்களே ஆன நிலையில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்: 25 நாட்களில் இருவரையும் கொலை செய்த பெண்ணின் தந்தை!

எட்டையபுரம் அருகே காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ரேஷ்மாவின் தந்தை முத்துக் குட்டியை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரது தாயார் மகாலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
அன்று லட்சம்.. இன்று கோடிக்கணக்கில் மோசடி.. அமிதாப் நிகழ்ச்சி பங்கேற்ற பெண் சம்பவம்!
அன்று லட்சம்.. இன்று கோடிக்கணக்கில் மோசடி.. அமிதாப் நிகழ்ச்சி பங்கேற்ற பெண் சம்பவம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
Embed widget