மேலும் அறிய

Crime: வீட்டுக்கு விசிட்.. ஹோட்டலில் ரூம்... திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை: சிக்கிய வாலிபர்!

திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘எனது வீட்டில் மேட்ரி மோனியல் மூலமாக வரன் பார்த்து வந்தனர். இதில் கடந்த அக்டோபர் மாதம் ஐயப்பன்தாங்கல் ஆதித்தனார் சாலை பகுதியை சேர்ந்த 29 வயதான தீபக் என்ற நபருடன் மாதவாரத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

25 சவரன் நகை மாப்பிள்ளைக்கு இரண்டு சவரன் நகை, 73 லட்சம் மதிப்பிலான வீட்டுப்பொருட்கள் வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். அதற்கு நாங்கள் 15 சவரன் நகை மட்டும் போட முடியும் என தெரிவித்தோம்.

கடந்த நவம்பர் மாதம் தீபக் என்னிடம் தனியாக பேச வேண்டும் என மாமல்லபுரம் அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கட்டாயப்படுத்தி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி எனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து பலமுறை அவரது ஆசைக்கு இணங்க செய்தார். மேலும் எனக்கு வேலை வாங்கி தருவதாக பெங்களூர் அழைத்துச் சென்று அங்கே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்து அங்கும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்தநிலையில், தற்போது மாப்பிள்ளை வீட்டார் 25 சவரன் நகை மற்றும் 13 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வோம். இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என மிரட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஆசை வார்த்தை கூறி என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தீபக் மற்றும் வரதட்சனை கேட்டு மிரட்டிய அவரது அம்மா ஷோபா, அண்ணன் சஞ்சய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தீபக் பல்வேறு இடங்களுக்கு இளம் பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தீபக் மீது வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் நேற்று காலை தீபக்கை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget