மேலும் அறிய

Crime : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?

தாம்பரத்தில் திருமணமாகிய ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் 17 பவுன் நகையுடன் புதுப்பெண் மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது ரங்கராஜபுரம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். அவருக்கு வயது 25. இவர் முடிச்சூர் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிநயா. அவருக்கு வயது 28.

இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவி இருவரும் வேறு, வேறு நகை கடைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அபிநயா ஒருநாள் மட்டுமே சென்ற நிலையில் பின்னர் வேலைக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடராஜனின் பெற்றோர் மற்றும் தம்பி வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளனர்.


Crime : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?

வீட்டில் புதுமணத் தம்பதிகளான நடராஜன் மற்றும் அபிநயா மட்டுமே இருந்தனர். அப்போது, நடராஜன் சிறிய வேலை காரணமாக முடிச்சூர் சென்றுள்ளார். பின்னர், தனது வேலையை முடித்துவிட்டு நடராஜன் வீடு திரும்பியபோது மனைவி அபிநயாவை காணவில்லை. வீட்டில் சுற்றிப் பார்த்தபோதும் அபிநயாவை காணவில்லை.

அப்போது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பணம் மற்றும் நகை மாயமாகி இருந்தது. பீரோவில் இருந்த நடராஜனின் தாய்க்கு சொந்தமான 17 பவுன் தங்க நகை, சீட்டு பணம் 20 ஆயிரம் மாயமாகியிருந்தது. இதனால், நடராஜன் அதிர்ச்சியடைந்தார். அதிர்ச்சியில் உறைந்த நடராஜன் அவரது மனைவி அபிநயாவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர்தான் அபிநயா நகை மற்றும் பணத்துடன் மாயமாகியிருப்பது உணர்ந்து நடராஜன் மன வேதனை அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Crime : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. நடராஜனும், அபிநயாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அபிநயாவை திருமணம் செய்து கொள்ள நடராஜன் கேட்டபோது, அதற்கு சம்மதம் தெரிவித்த அபிநயா தான் வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறியதுடன், இங்கு தனியாக வசித்து வருவதாகவும் நடராஜனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவில் தெருவில் தன்னுடைய பெற்றோர்கள் முன்னிலையில் நடராஜன் அபிநயாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தில் அபிநயாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பின்னர், நடராஜன் வீட்டில் நடராஜனின் பெற்றோர்கள் மற்றும் தம்பியுடன் அபிநயா அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும், அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றியுள்ளனர். அதில், மதுரை முகவரி உள்ளது. இந்த முகவரி போலி முகவரியா..? அல்லது உண்மை முகவரியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அபிநயா திட்டமிட்டு காதல் மோசடியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் இதில் நிகழ்ந்துள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget