சென்னையில் அதிர்ச்சி... அளவுக்கு அதிகமாக மது குடித்த மாணவி உயிரிழப்பு - என்ன நடந்தது?
Chennai: சென்னை கேளம்பாக்கம் அருகே அதிக அளவு மது குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே, அதிகளவு மது குடித்த மாணவி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
போதையில் தள்ளாடும் இளைஞர்கள்
வீக்கெண்ட் என சொல்லக்கூடிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான இளைஞர்கள், பொழுதை போக்குவதற்காக போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் மூலம் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது. போதைப் பொருட்களை பயன்படுத்துவது என்பது உடல் நலத்திற்கு தீங்கு என தெரிந்திருந்தும், இளைஞர்கள் அதனை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது. அந்த வகையில் அதிக அளவு மது போதை காரணமாக, கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தனியார் கல்லூரி மாணவி
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, படூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்பவர் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனியார் ஏகாட்டூரில் விடுதியில், தங்கி வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு கவிதா சென்று விட்டு வந்துள்ளார். ஊரிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து கவிதா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தோழியுடன் மது அருந்திய மாணவி
கவிதா தனது தோழியின் அறையில் தங்கி இரவு முழுவதும் மது குடித்துள்ளார். போதையில் அளவுக்கு அதிகமான மதுவை அருந்தியதாக தெரிகிறது. இதனால் மது போதை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல், வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக கவிதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பிரேதத்தை கைப்பற்றிய கேளம்பாக்கம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பிய நிலையில் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

