மேலும் அறிய

Crime: திருப்போரூர் அருகே முதியவர் மர்ம மரணம்; உடன் தங்கி இருந்த பெண் கைது - மாறுபட்ட தகவலால் குழம்பும் போலீஸ்

திருப்போரூர் அருகே டிரம்மில் பிளாஸ்டிக் கவரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கொலை வழக்கில், அவர் ரத்த வாந்தி எடுத்ததால் இறந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

துர்நாற்றம் வீசிய வீடு
 
செங்கல்பட்டு  (Chengalpattu): செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் ஐந்து போர்ஷன்கள் உள்ளன. ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை செய்யும் தொழிலாளர்களே பெரும்பாலும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் ஒரு போர்ஷனில் கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆணும், சுமார் 54 வயது மதிக்கத்தக்க பெண்ணும் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், வாடகை தொகை கொடுக்காததால், அதை கேட்பதற்காக ராஜேஸ்வரி நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது, வீடு இரண்டு நாட்கள் மேலாக பூட்டி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வீட்டு உரிமையாளர் ராஜேஸ்வரி சந்தேகம் அடைந்துள்ளார்.
 
உடலை மீட்ட போலீஸ்
 
இதையடுத்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் டிரம்மை வெளியே கொண்டு வந்து பார்த்தபோது மிக மோசமாக அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அது அந்த வீட்டில் வசித்து வந்த ஆண் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
எழிலரசி மீது சந்தேகம்
 
ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தரணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த நபரின் பெயரில் வளத்தி கோவிலான் (76) என்பதும் அவருடன் எழிலரசி (54) என்பவர் வாழ்ந்து வந்தார். இருவரும் விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.  வளத்தி கோவிலானை கொலை செய்தது யார், எழிலரசி எங்கே என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வளத்தி கோவலனின் மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் எழிலரசி என்ற பெண்ணுடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
 
"ரத்த வாந்தி எடுத்து " 
 
இந்த நிலையில் திடீரென மாயமான எழிலரசி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவி எழிலரசியில், செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அந்த செல்போன் சிக்னலை வைத்து வளத்திகோவிலானுடன், இருந்த பெண் எழிலரசியை திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் கொலை செய்யவில்லை எனவும் திடீரென அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்து விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை டிம்மில் வைத்து மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன் என தெரிவித்தார். இதனால் குழப்பம் அடைந்த போலீசார் உடற்கூர் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். எழிலரசிக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா, அவர் ஒருவரே இச்செயலை செய்திருக்க முடியுமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக ஆலத்தூர் அருகே கருங்குழிப்பள்ளம் பகுதியில் ஒரு தனியார் தோட்ட காவலாளியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Embed widget