மேலும் அறிய

காப்பக சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த பாதிரியார் சிக்கியது எப்படி..?

வாயலூரில் தான் நடத்தி வந்த சிறுவர் காப்பகத்தில் வளர்ந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கா்ப்பிணியாக்கி போக்சோ வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிறிஸ்துவ பாதிரியார்..

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள வாயலூரில், தான் நடத்தி வந்த சிறுவர் காப்பகத்தில் வளர்ந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கா்ப்பிணியாக்கி போக்சோ வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிறிஸ்துவ பாதிரியாரை மாமல்லபுரம் மகளிர் போலீசார் கோயம்பேடு போலீசார் உதவியுடன் சென்னையில் உள்ள ஓட்டலில் கைது செய்தனர். 

காப்பக சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த பாதிரியார் சிக்கியது எப்படி..?
 
செங்கல்பட்டு மாவட்டம், வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் சார்லஸ் (வயது59), இவர் தனது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த பாதியார் சார்லஸ் தலைமறைவானார். இதையடுத்து அச்சிறுமியின் உறவினர் பத்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 1½ வருடங்களாக தலைமறைவாக உள்ள அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாகத்தில் இருந்து வெளியேறிய அவர் போலீசுக்கு பயந்து மீண்டும் தனது காப்பாகத்திற்கு வராமல் பல இடங்களில் பதுங்கி, பதுங்கி வாழ்ந்து வந்துள்ளார். 

காப்பக சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த பாதிரியார் சிக்கியது எப்படி..?
 
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் சென்னை கோயம்பேட்டில் ஒரு இடத்தில் பதுங்கி வாழ்ந்து வருவதாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் உணவருந்த வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கோயம்பேடு போலீசாரின் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 

காப்பக சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த பாதிரியார் சிக்கியது எப்படி..?
 
பிறகு மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு இங்குள்ள அரசு பொதுமருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1½ வருடமாக மகளிர் போலீசுக்கு டிமிக்கு கொடுத்து வந்த அவரை தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிரியார் சார்லஸ் கர்ப்பமாக்கி, 2½ வயதில் குழந்தை உள்ள  அச்சிறுமிக்கு தற்போது 20 வயது பூர்த்தியாகிறது. குழந்தையுடன் உள்ள அச்சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget