மேலும் அறிய

திருட்டு பைக்கில் ஜாலியாக சுற்றும் "ஜோடி"... பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்

Chengalpattu: செங்கல்பட்டு பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் ஒரு ஜோடி ஜாலியாக சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் குருசேவ். இவர் செங்கல்பட்டு பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் குருசேவ் கடந்த நான்காம் தேதி சொந்த ஊர் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை, கட்டண வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளார். 

திருடப்பட்ட இருசக்கர வாகனம்

இதனைத் தொடர்ந்து தனது பணிகள் முடிந்த ஒன்பதாம் தேதி செங்கல்பட்டு திரும்பியுள்ளார். தொடர்ந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதே கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருசக்கர வாகனம் கிடைக்காததால், பத்தாம் தேதி இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வாகனம் தொலைந்து விட்டதற்காக புகார் அளித்தார் ‌‌.

இளம் பெண்ணுடன் பயணம்

இந்தநிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனது இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர், ஒரு இளம் பெண்ணுடன் பயணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை வீடியோ எடுத்துக் கொண்டே அவரை ஓரம் நிறுத்தி வாகனம் குறித்து விசாரித்தவுடன், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்த இளைஞர் வாகனத்தை வேகமாக திருப்பி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். 

பொதுமக்கள் அதிர்ச்சி 

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ ஆதாரத்தை காவல் நிலையத்திற்கு ஒப்படைத்து வாகனத்தை மீட்டு தருமாறு குருசேவ், காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனத்தை திருடிவிற்கும் நபர்கள் மத்தியில், திருடப்பட்ட பகுதியிலேயே இருசக்கர வாகனத்தில் இளைஞர் தோழியுடன், உலா வந்த சம்பவம் அதிர்ச்‌சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு நகர் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் திருட்டு சம்பவங்கள் 

செங்கல்பட்டு நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையம் பகுதி மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருட்டு சம்பவங்கள் நடைபெறும் எனத் தெரிந்த இடங்களிலும் காவல்துறையினர் உரிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
MK STALIN: யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
MK STALIN: யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
“உனக்கென்னப்பா நீ பைத்தியம்” டிடிவி தினகரனை இபிஎஸ்க்காக வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்
“உனக்கென்னப்பா நீ பைத்தியம்” டிடிவி தினகரனை இபிஎஸ்க்காக வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
Embed widget