மேலும் அறிய

Crime: என் காதலி தான் வேண்டும்.. 2வது மனைவி, பெட்ரோல் ஊற்றி, சிலிண்டரை வெடிக்கச் செய்து கொன்ற கணவன்

Crime: காதலியை திருமணம் செய்வதற்காக இரண்டாவது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை, பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.

Crime: இரண்டாவது மனைவியை பெட்ரோல் ஊற்றி, கேஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து கொடூரமாக கொலை செய்த கணவன் தலைமறைவாகியுள்ளார்.

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்:

பீகாரைச் சேர்ந்த நபர் தனது காதலியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதற்கு அவரது இரண்டாவது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மனைவி மீது பெட்ரோலை ஊற்றி, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து மனைவியை கொடூரமாக கொன்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றி இரண்டாவது திருமணம்:

நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார், 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அதற்கு பிறகு தான் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததும், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் சுனிதா மற்றும் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தாலும், சுனிதாவின் குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ தொடங்கிய நிலையில், தம்பதிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளன.

காதலியை திருமணம் செய்ய திட்டம்:

இந்த சூழலில் தான் தனது காதலியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக விகாஸ் தெரிவித்துள்ளார். இதனால், சுனிதா வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கு இடையே அவ்வப்போது சண்டையும் வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையேயான மனஸ்தாபம் அதிகரிக்க, சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்கே சென்றுள்ளார். கடந்த மாதம் தொடங்கிய துர்கா பூஜைக்கு முன்பாக மாமியார் வீட்டிற்கு சென்ற  விகாஸ், தனது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்து பேசி சமாதானம் செய்துள்ளார்.  அதன்படி சுனிதா கணவன் வீட்டிற்கும் சென்றுள்ளார்.

இரண்டாவது மனைவி கொடூரக் கொலை:

இந்நிலையில் தான் சனிக்கிழமை காலை 1 மணியளவில், சுனிதாவிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். அப்போது, கணவன் விகாஸ் என் மீது பெட்ரோலை ஊற்றி முற்றத்தில் அடைத்து வைத்ததோடு, வீட்டின் கேஸ் சிலிண்டர் வால்வுகளை திறந்து தீக்குச்சியையும் கொளுத்தி போட்டார். நான் இனி பிழைக்க மாட்டேன்” என சுனிதா கூறியதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தப்பித்து ஓடிய கணவன் குடும்பத்தார்

சுனிதாவின் தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்த நேரத்திலேயே விகாஸ் குமாரின் குடும்பத்தினர், அந்த பெண்ணின் உடலிற்கு இறுதி மரியாதை செய்து தகனம் செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். ஆனால், சுனிதாவின் குடும்பத்தினரை கண்டதும் அவர்கள் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய விகாஸ் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
Embed widget